Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
50 : 6

قُلْ لَّاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ لَكُمْ اِنِّیْ مَلَكٌ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ؕ— اَفَلَا تَتَفَكَّرُوْنَ ۟۠

6.50. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• الأنبياء بشر، ليس لهم من خصائص الربوبية شيء البتة، ومهمَّتهم التبليغ، فهم لا يملكون تصرفًا في الكون، فلا يعلمون الغيب، ولا يملكون خزائن رزق ونحو ذلك.
1. தூதர்களும் மனிதர்கள்தாம். எவ்வித தெய்வீகப் பண்பும் அவர்களிடம் இல்லை. அவர்களின் பணி தூதை எடுத்துரைப்பதுதான். அவர்கள் பிரபஞ்சத்தில் எவ்வித நடவடிக்கைக்கும் உரிமையற்றவர்கள். அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். வாழ்வாதார கருவூலங்களுக்கும் அவர்கள் அதிபதிகளாக இல்லை. info

• اهتمام الداعية بأتباعه وخاصة أولئك الضعفاء الذين لا يبتغون سوى الحق، فعليه أن يقرِّبهم، ولا يقبل أن يبعدهم إرضاء للكفار.
2. அழைப்பாளர்கள் தம்மைப் பின்பற்றுவோருக்கே -சத்தியத்தை மட்டும் விரும்பும் பலவீனர்களுக்கு- முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிராகரிப்பாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்களைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. info

• إشارة الآية إلى أهمية العبادات التي تقع أول النهار وآخره.
3. பகலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நிகழும் வணக்கங்களின் முக்கியத்துவத்தையும் இவ்வசனம் உணர்த்துகின்றது. info