Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an

external-link copy
6 : 14

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

14.6. -தூதரே!- மூஸா தம் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி, தம் சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களிடம் கூறியதை நினைவு கூர்வீராக. அவர் கூறினார்: “ சமூகமே! உங்கள் மீது அல்லாஹ் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி, அவர்களின் தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தான். அவர்கள் உங்களை கொடிய வேதனையில் ஆழ்த்தியிருந்தார்கள். பிர்அவ்னின் ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும் ஒருவன் உங்களிடையே பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவன் உங்களின் ஆண் மக்களைக் கொலை செய்து கொண்டும் உங்களை இழிவுபடுத்தவும் அவமானப்படுத்தவும் உங்களின் பெண் மக்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தான். அவர்களின் இந்த செயல்களில் உங்களின் பொறுமைக்கு மாபெரும் சோதனை இருந்தது. நீங்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால் பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து அவன் உங்களைக் காப்பாற்றி உங்களுக்கு வெகுமதியளித்தான். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• من وسائل الدعوة تذكير المدعوين بنعم الله تعالى عليهم، خاصة إن كان ذلك مرتبطًا بنعمة كبيرة، مثل نصر على عدوه أو نجاة منه.
1. அழைக்கப்படுவோர் மீது அல்லாஹ் புரிந்துள்ள - குறிப்பாக தமது எதிரிக்கெதிரான உதவி அல்லது எதிரியிடமிருந்து தப்பித்தல் போன்ற பெரும் - அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதும் தஃவாவின் வழிமுறைகளில் உள்ளவையாகும். info

• من فضل الله تعالى أنه وعد عباده مقابلة شكرهم بمزيد الإنعام، وفي المقابل فإن وعيده شديد لمن يكفر به.
2. தன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் அவற்றை அதிகப்படுத்துவதாக வாக்களிக்கிறான். இது அவனுடைய அருளாகும். அதற்கு மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான வேதனை இருக்கிறது. info

• كفر العباد لا يضر اللهَ البتة، كما أن إيمانهم لا يضيف له شيئًا، فهو غني حميد بذاته.
3. அடியார்களின் நிராகரிப்பால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதேபோன்று அடியார்களின் நம்பிக்கையால் அவனுக்கு எந்த பயனும் ஏற்பட்டு விடுவதில்லை. அவன் தன் உள்ளமையில் அனைவரையும் விட்டு தேவையற்றவன்; புகழுக்குரியவன். info