Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

அல்இன்ஷிகாக்

Qëllimet e sures:
تذكير الإنسان برجوعه لربه، وبيان ضعفه، وتقلّب الأحوال به.
மனிதன் தன் இறைவனிடமே திரும்பவேண்டும் என்பதை அவனுக்கு ஞாபகமூட்டுதலும், அவனது பலவீனத்தையும் அவனது நிலமைகள் மாறிமாறி வருவதையும் தெளிவுபடுத்தலும் info

external-link copy
1 : 84

اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ

84.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது, info
التفاسير:

external-link copy
2 : 84

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ

84.2. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்குப் பொருத்தமானதாகும். info
التفاسير:

external-link copy
3 : 84

وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ

84.3. தோலை விரிப்பது போல் பூமியை அல்லாஹ் விரியச் செய்யும் போது info
التفاسير:

external-link copy
4 : 84

وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ

84.4. அது தன்னுள் இருக்குள் பொக்கிஷங்களையும் இறந்தவர்களையும் எறிந்துவிட்டு வெறுமையாகிவிடும். info
التفاسير:

external-link copy
5 : 84

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ

84.5. அது தன் இறைவனின் கட்டளையை செவியேற்று அடிபணியும். அதுதான் அதற்கு விதிக்கப்பட்டதாகும். info
التفاسير:

external-link copy
6 : 84

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ

84.6. மனிதனே! நிச்சயமாக நீ நற்செயலோ, தீயசெயலோ செய்யக்கூடியவன். அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்குவதற்காக அதனை நீ மறுமை நாளில் காண்பாய். info
التفاسير:

external-link copy
7 : 84

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ

84.7. யாருடைய செயல்பதிவேடு அவரது வலக்கரத்தில் கொடுக்கப்படுமோ. info
التفاسير:

external-link copy
8 : 84

فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ

84.8. அவரது செயல்களை குற்றம்பிடிக்காமல் அவருக்கு எடுத்துக்காட்டி அல்லாஹ் அவரை இலகுவான முறையில் விசாரணை செய்வான். info
التفاسير:

external-link copy
9 : 84

وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

84.9. அவர் தம் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக திரும்புவார். info
التفاسير:

external-link copy
10 : 84

وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ

84.10. யாருடைய செயல்பதிவேடு அவரது முதுகுக்குப் பின்னால் இடக்கரத்தில் கொடுக்கப்படுமோ. info
التفاسير:

external-link copy
11 : 84

فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ

84.11. அவர் தனக்குத் தானே அழிவைக் கூவி அழைப்பார். info
التفاسير:

external-link copy
12 : 84

وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ

84.12. அவர் நரக நெருப்பில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார். info
التفاسير:

external-link copy
13 : 84

اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

84.13. நிச்சயமாக அவர் உலகில் தன் நிராகரிப்பு மற்றும் பாவங்கள் என்பவற்றில் ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக இருந்தார். info
التفاسير:

external-link copy
14 : 84

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ

84.14. நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார். info
التفاسير:

external-link copy
15 : 84

بَلٰۤی ۛۚ— اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ

84.15. ஏனில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவரை முதன்முறையாகப் படைத்ததுபோன்றே மீண்டும் அவரை வாழ்வின் பக்கம் திருப்புவான். நிச்சயமாக அவரது இறைவன் அவரது நிலையைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. விரைவில் அவரது செயலுக்கேற்ப அவன் அவருக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:

external-link copy
16 : 84

فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ

84.16. சூரியன் மறைந்த பிறகு அடிவானத்தில் தோன்றும் செந்நிறத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
17 : 84

وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ

84.17. இரவின் மீதும் அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
18 : 84

وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ

84.18. சந்திரன் மீதும் அது ஒன்று சேர்ந்து பூரண சந்திரனாக ஆவதின் மீதும் அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
19 : 84

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ

84.19. -மனிதர்களே!- விந்திலிருந்து இரத்தக்கட்டியாக, இரத்தக்கட்டியிலிருந்து சதைத்துண்டாக, வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நோக்கி நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலையை நோக்கி நிச்சயம் ஏறிச்செல்வீர்கள். info
التفاسير:

external-link copy
20 : 84

فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ

84.20. இந்த நிராகரிப்பாளர்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கைகொள்வதில்லையே! info
التفاسير:

external-link copy
21 : 84

وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟

84.21. அவர்களிடம் குர்ஆன் எடுத்துரைக்கப்பட்டால் தங்கள் இறைவனுக்காக சிரம்பணிவதுமில்லையே! info
التفاسير:

external-link copy
22 : 84

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ

84.22. மாறாக நிராகரிப்பாளர்கள் தூதர் தங்களிடம் கொண்டுவந்ததை பொய்யாக்குகிறார்கள். info
التفاسير:

external-link copy
23 : 84

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ

84.23. அவர்களின் உள்ளங்கள் சேர்த்து வைத்திருப்பதை அவன் அறிவான். அவர்கள் செய்யும் செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:

external-link copy
24 : 84

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ

84.24. -தூதரே!- அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது என்று அறிவித்துவிடுவீராக. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• خضوع السماء والأرض لربهما.
1. வானமும் பூமியும் தம் இறைவனுக்குக் கட்டுப்படுகின்றன. info

• كل إنسان ساعٍ إما لخير وإما لشرّ.
2. ஒவ்வொரு மனிதனும் நன்மையை நோக்கியோ, தீமையை நோக்கியோ முயற்சி செய்யக்கூடியவன்தான். info

• علامة السعادة يوم القيامة أخذ الكتاب باليمين، وعلامة الشقاء أخذه بالشمال.
3. வலக்கரத்தால் செயல்பதிவேட்டை பெற்றுகொள்வது நற்பாக்கியத்தின் அடையாளமாகும். இடக்கரத்தால் செயல்பதிவேட்டை பெற்றுக்கொள்வது துர்பாக்கியத்தின் அடையாளமாகும். info

external-link copy
25 : 84

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠

84.25. ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களுக்கு சுவனம் என்னும் முடிவுறா நன்மை உண்டு. info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• يكون ابتلاء المؤمن على قدر إيمانه.
1. நம்பிக்கையாளனின் நம்பிக்கையின் அளவிற்கேற்பவே அவனுக்கு சோதனைகள் ஏற்படும். info

• إيثار سلامة الإيمان على سلامة الأبدان من علامات النجاة يوم القيامة.
2. உயிரைப் பாதுகாப்பதைவிட ஈமானைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது மறுமை நாளில் வெற்றிக்கான அடையாளங்களில் ஒன்றாகும். info

• التوبة بشروطها تهدم ما قبلها.
3. நிபந்தனைகளுடன் பாவமன்னிப்புத் தேடுதல் முந்தைய பாவங்களை அழித்துவிடுகிறது. info