Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
189 : 7

هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ— فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ— فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟

7.189. -ஆண்கள் பெண்களே!- அவன்தான் உங்களை ஆதம் என்ற ஒரு உயிரிலிருந்து படைத்தான். ஆதமிலிருந்து அவருடைய விலா எலும்பிலிருந்து அவருடைய மனைவி ஹவ்வாவை நிம்மதி பெறுவதற்காகப் படைத்தான். கணவன் மனைவியுடன் கூடிய போது அவள் இலேசாக கர்ப்பமுற்றாள். அது ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அவளால் அதை உணர முடியவில்லை. இந்த கர்ப்பத்துடன் அவள் தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டே சென்றாள். எவ்வித சுமையையும் அவள் உணரவில்லை. அவளுடைய வயிற்றில் அது பெரிதானபோது அவள் கனத்தை உணர்ந்த போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனிடம் பின்வருமாறு இறைஞ்சினார்கள்: -“எங்கள் இறைவா!- எங்களுக்கு நீ பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையை அளித்தால் நாங்கள் உன் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம்.” info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• في الآيات بيان جهل من يقصد النبي صلى الله عليه وسلم ويدعوه لحصول نفع أو دفع ضر؛ لأن النفع إنما يحصل من قِبَلِ ما أرسل به من البشارة والنذارة.
1. நபியவர்களை நாடிச்சென்று, பலன் ஏற்படவோ தீங்கினை தடுக்கவோ அவர்களிடம் பிரார்த்தனை புரிவோரின் மடமையை மேற்கூறிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஏனெனில் அவருக்கு வழங்கப்பட்ட நற்செய்தி மற்றும் எச்சரிக்கையின் மூலமே பலன் உண்டாகும். info

• جعل الله بمنَّته من نوع الرجل زوجه؛ ليألفها ولا يجفو قربها ويأنس بها؛ لتتحقق الحكمة الإلهية في التناسل.
2. மனைவி கணவனுடன் இணைந்துகொள்வதற்காக, அவளது நெருக்கத்தை வெறுக்காமலிருப்பதற்காகவும் அல்லாஹ் தனது அருளினால் ஆணிலிருந்தே அவனது மனைவியைப் படைத்துள்ளான். ஏனெனில் அதன் மூலமே இனப்பெருக்கத்தில் அல்லாஹ்வின் நோக்கம் நிறைவேறும். info

• لا يليق بالأفضل الأكمل الأشرف من المخلوقات وهو الإنسان أن يشتغل بعبادة الأخس والأرذل من الحجارة والخشب وغيرها من الآلهة الباطلة.
3. பரிபூரணமான, மிகச் சிறந்த படைப்பான மனிதன் தன்னைவிட இழிந்த படைப்புகளான கல்லையும் கட்டையையும் ஏனைய பொய்யான தெய்வங்களையும் வணங்குவது அவனுக்கு உகந்ததல்ல. info