Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

Numri i faqes:close

external-link copy
51 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ— بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ— وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

5.51. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தமது மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத்தான் உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இருபிரிவினரும் உங்களை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். உங்களில் அவர்களுடன் நட்புகொள்பவர் அவர்களைச் சார்ந்தவர்தாம். நிராகரிப்பாளர்களுடன் நட்புகொள்ளும் அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான். info
التفاسير:

external-link copy
52 : 5

فَتَرَی الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یُّسَارِعُوْنَ فِیْهِمْ یَقُوْلُوْنَ نَخْشٰۤی اَنْ تُصِیْبَنَا دَآىِٕرَةٌ ؕ— فَعَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَیُصْبِحُوْا عَلٰی مَاۤ اَسَرُّوْا فِیْۤ اَنْفُسِهِمْ نٰدِمِیْنَ ۟ؕ

5.52. தூதரே! பலவீனமான நம்பிக்கையுடைய நயவஞ்சகர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நேசிப்பதற்கு முன்வருவதை நீர் காண்பீர். அவர்கள் கூறுகிறார்கள், “இவர்கள் நம்மை மிகைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் நமக்குத் தீங்கிழைக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றியளிக்கக்கூடும் அல்லது யூதர்களின் அதிகாரத்தை இல்லாமலாக்கக்கூடிய ஏதேனும் ஒன்றை கொண்டுவரக்கூடும். அப்போது அவர்களை நேசிப்பதற்கு முந்திக்கொண்டு சென்றோர் தாம் கூறிவந்த பலமற்ற காரணங்கள் பிழைத்துவிட்டதனால் தம் உள்ளங்களில் தாம் மறைத்துவைத்திருந்த நயவஞ்சகத்திற்காக கைசேதப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
53 : 5

وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ— اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ— حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِیْنَ ۟

5.53. அப்போது நம்பிக்கையாளர்கள் இந்த நயவஞ்சகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்களாகக் கூறுவார்கள், “நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொள்வதிலும் உதவிசெய்வதிலும் தோழமைகொள்வதிலும் உங்களுடன் இருக்கின்றோம்” என்று இவர்கள்தாம் உறுதியான சத்தியம் செய்து கூறினார்களா?” அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தங்களின் குறிக்கோள் தவறியதனாலும், அல்லாஹ் அவர்களுக்கு வேதனையைத் தயார்படுத்தி வைத்திருப்பதனாலும் அவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். info
التفاسير:

external-link copy
54 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ— اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ— یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ— ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

5.54. நம்பிக்கைக் கொண்டவர்களே! உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தை விட்டு நிராகரிப்பின் பக்கம் திரும்பிச் சென்றால் - அல்லாஹ் அவர்களுக்குப் பதிலாக ஒரு சமூகத்தைக் கொண்டுவருவான். அவர்களது சிறந்த நடத்தையினால் அவர்கள் அவனை நேசிப்பார்கள், அவனும் அவர்களை நேசிப்பான். அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் கருணையாளர்களாகவும் நிராகரிப்பாளர்களுடன் கடினமானவர்களாவும் இருப்பார்கள். தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போர் செய்வார்கள். படைப்பினங்களின் திருப்தியை விட அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்கள் பழிப்பவர்களின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அல்லாஹ் அருள்புரிவதில் தாராளமானவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்து அவர்களுக்கு வழங்கக்கூடியவன் தகுதியற்றவர்களுக்கு அவன் அதனை வழங்குவதில்லை. info
التفاسير:

external-link copy
55 : 5

اِنَّمَا وَلِیُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رٰكِعُوْنَ ۟

5.55. யூதர்களோ கிறிஸ்தவர்களோ ஏனைய நிராகரிப்பாளர்களோ உங்களின் நண்பர்கள் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களுமே உங்களின் நண்பர்களாவர். அந்த நம்பிக்கையாளர்கள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குவார்கள். info
التفاسير:

external-link copy
56 : 5

وَمَنْ یَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِیْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ۟۠

5.56. அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் நம்பிக்கையாளர்களுடன் உதவியின் மூலமும் நட்புக்கொள்பவர்கள்தாம் அல்லாஹ்வின் அணியினராவர். அல்லாஹ்வின் அணியினர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். ஏனெனில் அல்லாஹ்வே அவர்களது உதவியாளனாக உள்ளான். info
التفاسير:

external-link copy
57 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ— وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

5.57. நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களை நேசர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வைவும் அவன் உங்கள் மீது இறக்கியதையும் நம்பியவர்களாக இருந்தால் அவன் தடுத்துள்ள அவர்களின் நட்பைத் தவிர்த்து அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• التنبيه علي عقيدة الولاء والبراء التي تتلخص في الموالاة والمحبة لله ورسوله والمؤمنين، وبغض أهل الكفر وتجنُّب محبتهم.
1. உற்ற நட்பையும் நேசத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையார்களுக்கும் மட்டுமே உரித்தாக்கி நிராகரிப்பாளர்களை வெறுத்து அவர்களை நேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை ஞாபகமூட்டப்படுகின்றது. info

• من صفات أهل النفاق: موالاة أعداء الله تعالى.
2. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம் கொள்வது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• التخاذل والتقصير في نصرة الدين قد ينتج عنه استبدال المُقَصِّر والإتيان بغيره، ونزع شرف نصرة الدين عنه.
3. மார்க்கத்திற்கு உதவுவதில் குறை செய்வது, குறை செய்தவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் கொண்டுவரப்படுவதற்கும் மார்க்கத்திற்கு உதவிசெய்யும் பாக்கியம் அவரை விட்டும் பிடுங்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. info

• التحذير من الساخرين بدين الله تعالى من الكفار وأهل النفاق، ومن موالاتهم.
4. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்யும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களை நேசிப்பதைப் பற்றியும் எச்சரிக்கை விடுத்தல். info