Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

Numri i faqes:close

external-link copy
171 : 4

یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ— اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ— اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ— فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫— وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ— اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ— اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ— سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠

4.171. தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிருஸ்தவர்களிடம் கூறுவீராக: “உங்களின் மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈசாவைக் குறித்து உண்மையைத் தவிர எதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈசா மஸீஹ் உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம் அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். குன் - ஆகிவிடு என்பதுதான் அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம் அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ளுங்கள். ‘கடவுள்கள் மூவர்’ என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்கு மனைவியோ மகனோ யாரும் இல்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கு இடையிலுள்ளவையும் அவனுக்கே உரியன. வானங்கள் பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான். info
التفاسير:

external-link copy
172 : 4

لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ— وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟

4.172. மர்யமின் மகன் ஈசா அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார். அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கி உயர்ந்த பதவிகளை வழங்கிய வானவர்களும் அவனுக்கு அடிமைகளாக இருப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டார்கள். mஅவ்வாறிருக்க ஈசாவை நீங்கள் எவ்வாறு இறைவனாக்கிக் கொண்டீர்கள்? இணைவைப்பாளர்கள் எவ்வாறு வானவர்களை கடவுள்களாக்கிக் கொண்டார்கள்? அல்லாஹ்வை வணங்குவதைவிட்டும் எவர் தவிர்ந்துகொள்கிறாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான். info
التفاسير:

external-link copy
173 : 4

فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۚ— وَاَمَّا الَّذِیْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَیُعَذِّبُهُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬— وَّلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟

4.173. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி, அல்லாஹ்வுக்காக தூய்மையான எண்ணத்துடன் அவன் காட்டிய முறையில் நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் செயல்களுக்கான கூலியை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்தும் உபகாரத்திலிருந்தும் இன்னும் அதிகமாகவும் வழங்குவான். பெருமை மற்றும் கர்வம் காரணமாக அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்குக் கட்டுப்படுவதையும் விட்டு தவிர்ந்து கொண்டவர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை அளித்திடுவான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பயனளிக்கும் பாதுகாவலனையோ அவர்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளனையோ அவர்கள் பெறமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
174 : 4

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا ۟

4.174. மனிதர்களே! சாக்குப்போக்குகளை இல்லாமல் ஆக்கக்கூடிய சந்தேகங்களைப் போக்கக்கூடிய தெளிவான சான்று உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் வந்துள்ளது. அது தான் முஹம்மது (ஸல்) அவர்களாவார்கள். நாம் உங்கள்மீது குர்ஆன் என்னும் தெளிவான ஒளியையும் இறக்கியுள்ளோம். info
التفاسير:

external-link copy
175 : 4

فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ— وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ

4.175. யாரெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு தங்கள் தூதரின் மீது இறக்கப்பட்ட குர்ஆனைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்களோ அல்லாஹ் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் அவர்களின் மீது கருணை புரிவான். அதிகமான நன்மைகளையும் உயர்ந்த அந்தஸ்தையும் அவர்களுக்கு வழங்குவான். கோணலற்ற நேரான வழியின்பால் அவர்களுக்கு வழிகாட்டுவான். அது நிலையான சுவனத்தின்பால் செல்லும் வழியாகும். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• بيان أن المسيح بشر، وأن أمه كذلك، وأن الضالين من النصارى غلوا فيهما حتى أخرجوهما من حد البشرية.
1. ஈஸாவும் அவரது அன்னையும் மனிதர்கள்தாம். வழிகெட்ட கிறிஸ்தவர்கள் அவ்விருவரையும் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதும் அளவுக்கு அவர்களின் விஷயத்தில் வரம்புமீறிவிட்டார்கள். info

• بيان بطلان شرك النصارى القائلين بالتثليث، وتنزيه الله تعالى عن أن يكون له شريك أو شبيه أو مقارب، وبيان انفراده - سبحانه - بالوحدانية في الذات والأسماء والصفات.
2. இறைவன் மூவர் என்று கூறும் கிறிஸ்தவர்களின் இணைவைப்புக் கொள்கை தவறானது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் இணையோ, அல்லது அவனை போன்றவனோ அல்லது நெருக்கமானவனோ எதுவுமின்றி தூய்மையானவன். உள்ளமையிலும் பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. info

• إثبات أن عيسى عليه السلام والملائكة جميعهم عباد مخلوقون لا يستكبرون عن الاعتراف بعبوديتهم لله تعالى والانقياد لأوامره، فكيف يسوغ اتخاذهم آلهة مع كونهم عبيدًا لله تعالى؟!
3. ஈஸாவும் வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அடியார்கள்தாம் என்ற விஷயம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரும் ‘அவன் மட்டுமே வணக்கத்திற்கும் கட்டுப்படுவதற்கும் தகுதியானவன்’ என்பதை ஏற்றுக்கொள்வதை விட்டும் கர்வம்கொள்வதில்லை. எனவே அல்லாஹ்வின் அடியார்களாக இருப்பவர்களை எவ்வாறு கடவுள்களாக்க முடியும்? info

• في الدين حجج وبراهين عقلية تدفع الشبهات، ونور وهداية تدفع الحيرة والشهوات.
சந்தேகத்தைக் களையும் அறிவியல் ஆதாரங்களும் அத்தாட்சிகளும், தடுமாற்றத்தையும் மனோ இச்சையையும் அகற்றும் ஒளியும் நேர்வழியும் இம்மார்க்கத்தில் உண்டு. info