Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
3 : 35

یٰۤاَیُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ ؕ— هَلْ مِنْ خَالِقٍ غَیْرُ اللّٰهِ یَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؗ— فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

35.3. மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை உள்ளத்தாலும் நாவாலும் உறுப்புக்களின் செயல்களாலும் நினைவுகூருங்கள். மழையை இறக்குவதன் மூலம் வானிலிருந்தும், தாவரங்கள், பயிர்கள் இன்னும் பலவற்றை முளைக்கச் செய்வதன் மூலம் பூமியிலிருந்தும் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வாழ்வாதாரம் அளித்துக்கொண்டிருக்க, எவ்வாறு இந்த உண்மையை விட்டும் நீங்கள் திசைதிருப்பப்பட்டு, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி நிச்சயமாக அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறுவீர்கள்?
info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• مشهد فزع الكفار يوم القيامة مشهد عظيم.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் பதற்றத்திற்கு உள்ளாகும் காட்சி மகத்தான காட்சியாகும். info

• محل نفع الإيمان في الدنيا؛ لأنها هي دار العمل.
2. ஈமான் பயனளிக்கும் இடம் உலகமாகும். ஏனெனில் நிச்சயமாக அதுவே செயல்படும் களமாகும். info

• عظم خلق الملائكة يدل على عظمة خالقهم سبحانه.
3. வானவர்களை பிரமாண்டமாக படைத்திருப்பது அவர்களைப் படைத்த படைப்பாளனின் மகத்துவத்தைக் காட்டுகிறது. info