Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
51 : 15

وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ

15.51. இப்ராஹீமின் விருந்தினர்களாக வருகை தந்த வானவர்களின் தகவலை அவர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் அவருக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறவும் லூத்தின் சமூகத்தினருடைய அழிவைக் கொண்டு அறிவிக்கவும் வந்தவர்களாவர். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• في الآيات دليل على تزاور المتقين واجتماعهم وحسن أدبهم فيما بينهم، في كون كل منهم مقابلًا للآخر لا مستدبرًا له.
1. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வது, ஒன்று கூடுவது, ஒருவரையொருவர் பின்னோக்காமல், முன்னோக்கி தமக்கு மத்தியில் நல்லொழுக்குத்துடன் நடந்து கொள்வது ஆகியவை இறையச்சமுடையோரின் பண்புகள் என்பதற்கு இந்த வசனங்களில் ஆதாரம் இருக்கிறது. info

• ينبغي للعبد أن يكون قلبه دائمًا بين الخوف والرجاء، والرغبة والرهبة.
2. அடியானின் உள்ளம் எப்பொழுதும் பயத்திற்கும், ஆதரவு வைப்பதற்கும், அச்சத்திற்கும், ஆர்வத்திற்கும், மத்தியில் இருப்பது அவசியமாகும். info

• سجد الملائكة لآدم كلهم أجمعون سجود تحية وتكريم إلا إبليس رفض وأبى.
3. வானவர்கள் அனைவரும் ஆதமைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவருக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் சிரம்பணியாமல் மறுத்துவிட்டான். info

• لا سلطان لإبليس على الذين هداهم الله واجتباهم واصطفاهم في أن يلقيهم في ذنب يمنعهم عفو الله.
4. அல்லாஹ் வழிகாட்டி, தேர்ந்தெடுத்தவர்களை அல்லாஹ்வின் மன்னிப்பை விட்டும் தடுக்கும் ஒரு பாவத்தில் வீழ்த்துவதற்கு இப்லீஸுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. info