Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling - Omar Sharif

அந்நபஃ

external-link copy
1 : 78

عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ

எதைப் பற்றி அவர்கள் (தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்? info
التفاسير:

external-link copy
2 : 78

عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ

மகத்தான செய்தியைப் பற்றியா? info
التفاسير:

external-link copy
3 : 78

الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ

அதில் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். (அவர்களில் ஒருவர் மறுமை உண்டு என்றும்; இன்னொருவர் மறுமை இல்லை என்றும் கூறுகிறார்.) info
التفاسير:

external-link copy
4 : 78

كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ

அவ்வாறல்ல! (அவர்கள் அதை) விரைவில் அறிவார்கள். info
التفاسير:

external-link copy
5 : 78

ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟

பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை) விரைவில் அறிவார்கள். info
التفاسير:

external-link copy
6 : 78

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ

பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
7 : 78

وَّالْجِبَالَ اَوْتَادًا ۟ۙ

இன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல்களாக நாம் ஆக்கவில்லையா? info
التفاسير:

external-link copy
8 : 78

وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ

இன்னும், உங்களை ஜோடிகளாகப் படைத்தோம். (எல்லாவற்றிலும் ஆண், பெண், நல்லது, கெட்டது, வானம், பூமி, நீர், நெருப்பு என இரு வகைகளை படைத்தோம்.) info
التفاسير:

external-link copy
9 : 78

وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ

இன்னும், உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
10 : 78

وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ

இன்னும், இரவை (உங்களை மூடிக்கொள்கிற) ஆடையாக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
11 : 78

وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۟ۚ

இன்னும், பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கான நேரமா)க ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
12 : 78

وَبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ

இன்னும், உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம். info
التفاسير:

external-link copy
13 : 78

وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟ۙ

இன்னும், பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
14 : 78

وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ

இன்னும், கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம். info
التفاسير:

external-link copy
15 : 78

لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ

அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்). info
التفاسير:

external-link copy
16 : 78

وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ

இன்னும், (பழங்கள் நிறைந்த, கிளைகள்) அடர்த்தியான தோட்டங்களையும் (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்). info
التفاسير:

external-link copy
17 : 78

اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ

நிச்சயமாக தீர்ப்பு நாள் குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
18 : 78

یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ

எக்காளத்தில் ஊதப்படுகிற நாளில் (அது நிகழும்). ஆக, (அந்த நாளில் நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள். info
التفاسير:

external-link copy
19 : 78

وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ

இன்னும், வானம் திறக்கப்படும். ஆக, அது, (பல) வழிகளுடையதாக மாறிவிடும். info
التفاسير:

external-link copy
20 : 78

وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ

இன்னும், மலைகள் அகற்றப்பட்டுவிடும். ஆக, (பார்ப்பவர்களுக்கு) அது கானல் நீராக மாறிவிடும். info
التفاسير:

external-link copy
21 : 78

اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟ۙ

நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
22 : 78

لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ

எல்லை மீறிகளுக்கு (-பெரும் பாவிகளுக்கு) தங்குமிடமாக இருக்கும். info
التفاسير:

external-link copy
23 : 78

لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ

அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக் கூடியவர்களாக (இருப்பார்கள்). info
التفاسير:

external-link copy
24 : 78

لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ

(உடல்கள் மீது நரக நெருப்பின் சூட்டை தனிக்கிற) குளிர்ச்சியையோ (குடிப்பதற்கும் தாகம் தீர்ப்பதற்கும் நல்ல) ஒரு பானத்தையோ அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள், info
التفاسير:

external-link copy
25 : 78

اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ

கொதி நீரையும், சீழ் சலத்தையும் தவிர. (இவைதான் அவர்களின் குடிபானங்களாக இருக்கும்.) info
التفاسير:

external-link copy
26 : 78

جَزَآءً وِّفَاقًا ۟ؕ

(அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்.) info
التفاسير:

external-link copy
27 : 78

اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ

நிச்சயமாக அவர்கள் (மறுமையில் தங்களது செயல்கள்) விசாரிக்கப்படுவதை பயப்படாதவர்களாக இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
28 : 78

وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ

இன்னும், நம் வசனங்களை பிடிவாதமாக பொய்ப்பித்தார்கள். info
التفاسير:

external-link copy
29 : 78

وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ

(அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம். info
التفاسير:

external-link copy
30 : 78

فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠

ஆகவே, (இன்றைய தினம் நரக தண்டனையை) சுவையுங்கள்! ஆக, உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம், தண்டனையைத் தவிர! info
التفاسير:

external-link copy
31 : 78

اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி (-நற்பாக்கியம்) உண்டு. info
التفاسير:

external-link copy
32 : 78

حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ

தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு. info
التفاسير:

external-link copy
33 : 78

وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ

இன்னும், சம வயதுடைய, வாலிபமான கன்னிகளும் உண்டு. info
التفاسير:

external-link copy
34 : 78

وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ

இன்னும், (மதுவால்) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு. info
التفاسير:

external-link copy
35 : 78

لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚۖ

அதில் வீண் பேச்சையும், (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதையும் செவியுற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
36 : 78

جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ

உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) அருட்கொடையாக (இவற்றை வழங்கப்படுவார்கள்). info
التفاسير:

external-link copy
37 : 78

رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ

(அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் பேசுவதற்கு உரிமை பெறமாட்டார்கள், info
التفاسير:

external-link copy
38 : 78

یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ— لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟

ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கிற நாளில். பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர பேசமாட்டார்கள். இன்னும், (பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட) அவர் சரியானதையே கூறுவார். info
التفاسير:

external-link copy
39 : 78

ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟

அதுதான் உண்மையான நாள். (அது நிகழ்ந்தே தீரும்.) ஆக, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் (தனக்கு) மீளுமிடத்தை (-தங்குமிடத்தை) ஆக்கிக்கொள்வார். info
التفاسير:

external-link copy
40 : 78

اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬— یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠

மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கிற நாளில் (நிகழ இருக்கிற) சமீபமான ஒரு தண்டனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் கூறுவான்: “நான் மண்ணாக ஆகிவிடவேண்டுமே” என்று. info
التفاسير: