Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
21 : 45

اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ— سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠

45.21. தங்களின் உறுப்புகளால் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஈடுபட்டவர்களை நாம் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களைப்போன்று ஆக்கி உலகிலும் மறுமையிலும் அவர்கள் சமமாகிவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவர்களின் இத்தீர்ப்பு மோசமானதாகும். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• العفو والتجاوز عن الظالم إذا لم يُظهر الفساد في الأرض، ويَعْتَدِ على حدود الله؛ خلق فاضل أمر الله به المؤمنين إن غلب على ظنهم العاقبة الحسنة.
1. அநியாயக்காரன் பூமியில் குழப்பம் விளைவிக்காமல், அல்லாஹ்வின் வரம்புகளை மீறாமல் இருந்தால் அவனைக் கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டுவிடுவது அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குக் கட்டளையிட்ட சிறந்த பண்புகளில் ஒன்றாகும். பெரும்பாலும் நல்ல முடிவு ஏற்படும் என்று கருதினால்தான் அது சிறந்ததாகும். info

• وجوب اتباع الشرع والبعد عن اتباع أهواء البشر.
2. மார்க்கத்தைப் பின்பற்றுவதும் மனிதர்களின் மனஇச்சைகளைவிட்டும் தூரமாகி இருப்பதும் கட்டாயமாகும். info

• كما لا يستوي المؤمنون والكافرون في الصفات، فلا يستوون في الجزاء.
3. எவ்வாறு நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களும் பண்புகளில் சமமாக மாட்டார்களோ அதுபோன்று கூலியிலும் சமமாக மாட்டார்கள். info

• خلق الله السماوات والأرض وفق حكمة بالغة يجهلها الماديون الملحدون.
4. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்கேற்ப படைத்துள்ளான். நாஸ்திகவாதிகளும் உலகாயுதவாதிகளும் அதனை அறிய மாட்டார்கள். info