Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
32 : 31

وَاِذَا غَشِیَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬— فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ؕ— وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ ۟

31.32. மலைகளைப் போன்ற, மேகங்களைப் போன்ற அலைகள் நாலா புறமும் அவர்களைச் சூழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே மனத்தூய்மையோடு வணங்கி பிரார்த்திக்கிறார்கள். அவன் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றி மூழ்காமல் கரை சேர்த்துவிட்டால் அவர்களில் சிலர் தன் மீது கடமையான நன்றி செலுத்தலை பரிபூரணமாகச் செய்யாமல் ஓரளவுக்கு நடுநிலையாக நடந்துகொள்கிறார்கள்; சிலர் அவனுடைய அருட்கொடைகளை மறுத்து நடந்துகொள்கிறார்கள். - இவ்வாறு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினால் அவனுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அதற்கு மாறு செய்பவரைப் போன்ற- துரோகிகளும், இறைவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டதனமாக நடந்துகொள்ளக்கூடியவர்களுமே நம்முடைய சான்றுகளை மறுக்கிறார்கள். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• نقص الليل والنهار وزيادتهما وتسخير الشمس والقمر: آيات دالة على قدرة الله سبحانه، ونعمٌ تستحق الشكر.
1. இரவு, பகல் நீளமாகவும் குறைவாகவும் வருவது, சூரியனும் சந்திரனும் வசப்படுத்தப்பட்டுள்ளது ஆகியவை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளாகும். நன்றி செலுத்துவதற்கு உரித்தான அருட்கொடைகளாகும். info

• الصبر والشكر وسيلتان للاعتبار بآيات الله.
2. பொறுமையும் நன்றியும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து படிப்பினை பெறுவதற்கான இரு வழிகளாகும். info

• الخوف من القيامة يقي من الاغترار بالدنيا، ومن الخضوع لوساوس الشياطين.
3.மறுமையை அஞ்சுவது உலகைக் கண்டு ஏமாறுதல், ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்குப் பணிதல் ஆகிவற்றை விட்டும் பாதுகாக்கும். info

• إحاطة علم الله بالغيب كله.
4. மறைவான ஒவ்வொன்றையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது. info