Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
27 : 31

وَلَوْ اَنَّمَا فِی الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ یَمُدُّهٗ مِنْ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

31.27. நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு எழுதுகோல்களாக ஆக்கப்பட்டு கடலும் அதனோடு இன்னும் ஏழு கடல்களும் மையாக மாறினாலும் கூட அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒருபோதும் முடிவடையாது. ஏனெனில் அவற்றுக்கு முடிவு இல்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன் படைப்பில், தன் திட்மிடலில் அவன் ஞானம் மிக்கவன். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• نعم الله وسيلة لشكره والإيمان به، لا وسيلة للكفر به.
1. அல்லாஹ்வின் அருட்கொடைகள் நன்றி செலுத்துவதற்கும் நம்பிக்கைகொள்வதற்கும் காரணமாக அமைய வேண்டுமே அன்றி அவனை நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது. info

• خطر التقليد الأعمى، وخاصة في أمور الاعتقاد.
2. குருட்டுத்தனமாக பின்பற்றுவதன் தீய விளைவு தெளிவாகிறது. குறிப்பாக நம்பிக்கை விடயத்தில். info

• أهمية الاستسلام لله والانقياد له وإحسان العمل من أجل مرضاته.
3. அல்லாஹ்வுக்கு அடிபணிவது மற்றும் அவனுடைய திருப்திக்காக நற்செயல்கள் புரிவதன் அவசியம் தெளிவாகிறது. info

• عدم تناهي كلمات الله.
4. அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் முடிவடையாதவை. info