Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
6 : 11

وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ— كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

11.6. பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் எந்த படைப்பினமானாலும் அதற்கு வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பை தானாகவே விரும்பி அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அது பூமியில் தங்குமிடத்தையும் மரணிக்கும் இடத்தையும் அல்லாஹ் அறிவான். படைப்புகள் ஒவ்வொன்றும், அவற்றிற்கான வாழ்வாதாரங்களும் அவை தங்குமிடங்களும் மரணிக்கும் இடங்களும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• سعة علم الله تعالى وتكفله بأرزاق مخلوقاته من إنسان وحيوان وغيرهما.
1. அல்லாஹ்வின் அறிவு விசாலமானது. மனிதர்கள் மிருகங்கள் மற்றும் ஏனைய தனது படைப்புகளின் வாழ்வாதாரத்திற்கு அவன் பொறுப்பேற்றுக் கொண்டான். info

• بيان علة الخلق؛ وهي اختبار العباد بامتثال أوامر الله واجتناب نواهيه.
2. அடியார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்களா என்பதை சோதிப்பதே படைப்பின் நோக்கமாகும். info

• لا ينبغي الاغترار بإمهال الله تعالى لأهل معصيته، فإنه قد يأخذهم فجأة وهم لا يشعرون.
3. பாவிகளுக்கு அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது. அவர்கள் உணராத வகையில் திடீரென்று அவன் அவர்களைப் பிடித்துவிடுவான். info

• بيان حال الإنسان في حالتي السعة والشدة، ومدح موقف المؤمن المتمثل في الصبر والشكر.
4. இன்பத்திலும் துன்பத்திலும் மனிதனின் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நன்றியும் பொறுமையும் உடைய நம்பிக்கையாளனின் நிலைப்பாடு புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. info