Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
41 : 11

وَقَالَ ارْكَبُوْا فِیْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖىهَا وَمُرْسٰىهَا ؕ— اِنَّ رَبِّیْ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟

11.41. நூஹ் நம்பிக்கைகொண்ட தம் குடும்பத்தாரிடமும் சமூகத்தாரிடமும் கூறினார்: “கப்பலில் ஏறிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கப்பல் புறப்படும். அவனுடைய பெயராலே அது நிலைகொண்டு விடும். நிச்சயமாக என் இறைவன் தன் பக்கம் மீளும் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நம்பிக்கையாளர்களை அவன் அழிவிலிருந்து காத்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• بيان عادة المشركين في الاستهزاء والسخرية بالأنبياء وأتباعهم.
1. இறைத் தூதர்களையும் அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• بيان سُنَّة الله في الناس وهي أن أكثرهم لا يؤمنون.
2. மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் என்பதே மனிதர்களின் விஷயத்தில் அல்லாஹ் விதித்த வழிமுறையாகும். info

• لا ملجأ من الله إلا إليه، ولا عاصم من أمره إلا هو سبحانه.
3. அல்லாஹ்வை விட்டும் வேறெங்கும் ஒதுங்கவோ, அவனின் கட்டளைகளில் இருந்து பாதுகாப்பவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. info