Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
51 : 10

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ— آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟

10.51. உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை உங்களிடம் வந்த பிறகு இதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை பயனளிக்காத சமயத்தில்தான் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா? இப்பொழுதுதான் நீங்கள் நம்பிக்கைகொள்கிறீர்களா? வேதனையை நிராகரிக்கும் வண்ணம் இதற்கு முன்னர் அதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الإنسان هو الذي يورد نفسه موارد الهلاك، فالله مُنَزَّه عن الظلم.
1. மனிதன்தான் தனக்குத் தானே அழிவிற்கான காரணிகளைத் தேடிக் கொள்கிறான். அநியாயம் செய்வதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். info

• مهمة الرسول هي التبليغ للمرسل إليهم، والله يتولى حسابهم وعقابهم بحكمته، فقد يعجله في حياة الرسول أو يؤخره بعد وفاته.
2. தூதரின் பணி, தான் அனுப்பப்பட்டோருக்கு எடுத்துரைப்பது மட்டுமே. அல்லாஹ் தனது ஞானத்திற்கேற்றவாறு அவர்களிடம் கணக்குத் தீர்த்து அவர்களைத் தண்டிக்கிறான். சிலவேலை தூதர் வாழும் போதே அதனை அவசரப்படுத்துவான். அல்லது அவரது மரணத்தின் பின் வரை அதனை தாமதப்படுத்துவான். info

• النفع والضر بيد الله عز وجل، فلا أحد من الخلق يملك لنفسه أو لغيره ضرًّا ولا نفعًا.
3. நலவும் தீமையும் அல்லாஹ்வின் கைவசமே உண்டு. எந்தவொரு படைப்பினமும் தனக்கோ ஏனையவர்களுக்கோ நலவு மற்றும் தீங்கு செய்யும் அதிகாரத்தைப் பெறவில்லை. info

• لا ينفع الإيمان صاحبه عند معاينة الموت.
4. மரணத்தைக் காணும் போது நம்பிக்கை கொள்வது பயனளிக்காது. info