Qurani Kərimin mənaca tərcüməsi - Tamil dilinə tərcümə - Ömər Şərif.

அல்இன்ஷிகாக்

external-link copy
1 : 84

اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ

வானம் பிளந்துவிடும் போது, info
التفاسير:

external-link copy
2 : 84

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ

இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது; info
التفاسير:

external-link copy
3 : 84

وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ

இன்னும், பூமி விரிக்கப்படும்போது, info
التفاسير:

external-link copy
4 : 84

وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ

இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது, info
التفاسير:

external-link copy
5 : 84

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ

இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது, இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படியும்போது (மனிதனே நீ செய்த நன்மை, தீமையின் பலனை பார்ப்பாய்)! info
التفاسير:

external-link copy
6 : 84

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் (சேருகிற வரை நல்லதை செய்வதில் அல்லது தீமை செய்வதில்) சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். ஆக, நீ அவனை (மறுமையில்) சந்திப்பாய். (அவன் உனது செயல்களுக்கு ஏற்ப உனக்குக் கூலி கொடுப்பான்.) info
التفاسير:

external-link copy
7 : 84

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ

ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்), info
التفاسير:

external-link copy
8 : 84

فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ

அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.) info
التفاسير:

external-link copy
9 : 84

وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

இன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார். info
التفاسير:

external-link copy
10 : 84

وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ

ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ, info
التفاسير:

external-link copy
11 : 84

فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ

(எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான். info
التفاسير:

external-link copy
12 : 84

وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ

இன்னும் சயீர் எனும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் நுழைந்து அவன் தீயில் எரிவான். info
التفاسير:

external-link copy
13 : 84

اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

நிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான். info
التفاسير:

external-link copy
14 : 84

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ

நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான். info
التفاسير:

external-link copy
15 : 84

بَلٰۤی ۛۚ— اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ

ஏனில்லை! (அவன் கண்டிப்பாக இறைவனிடம் வருவான்.) நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
16 : 84

فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ

ஆக, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்! info
التفاسير:

external-link copy
17 : 84

وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ

இரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
18 : 84

وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ

சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது, info
التفاسير:

external-link copy
19 : 84

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ

நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள். info
التفاسير:

external-link copy
20 : 84

فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ

ஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. info
التفاسير:

external-link copy
21 : 84

وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟

இன்னும், (அவர்களுக்கு என்ன நேர்ந்தது?) அவர்களுக்கு முன்னர் அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் (இறைவனுக்கு) சிரம் பணிவதில்லை! info
التفاسير:

external-link copy
22 : 84

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ

மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
23 : 84

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ

அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன். info
التفاسير:

external-link copy
24 : 84

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ

ஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
25 : 84

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠

(அவர்களில்) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு. info
التفاسير: