Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi.

external-link copy
166 : 4

لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ— وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ

4.166. தூதரே! யூதர்கள் உம்மை நிராகரித்தால் உம்மீது இறக்கப்பட்ட குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான். அதில் அவன் அடியார்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தனது விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கிய கல்வியை அதிலே இறக்கியுள்ளான். நீர் கொண்டுவந்தது உண்மையே என அல்லாஹ்வின் சாட்சியோடு வானவர்களும் சாட்சி கூறுகிறார்கள். சாட்சி கூறுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனுடைய சாட்சியம் மற்ற அனைவரின் சாட்சியத்தைக் காட்டிலும் போதுமானது. info
التفاسير:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• إثبات النبوة والرسالة في شأن نوح وإبراهيم وغيرِهما مِن ذرياتهما ممن ذكرهم الله وممن لم يذكر أخبارهم لحكمة يعلمها سبحانه.
1. நூஹ், இப்ராஹீம் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு தூது மற்றும் நபித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்ற விஷயம் தெளிவாகிறது. அவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். மற்றும் சிலரை தான் அறிந்த சில காரணத்துக்காக குறிப்பிடவில்லை. info

• إثبات صفة الكلام لله تعالى على وجه يليق بذاته وجلاله، فقد كلّم الله تعالى نبيه موسى عليه السلام.
2. அல்லாஹ் மூஸாவுடன் பேசி இருக்கிறான். இதிலிருந்து அவனது தகுதிக்கேற்ற விதத்தில் பேசும் பண்பு உண்டு என்பது உறுதியாகிறது. info

• تسلية النبي محمد عليه الصلاة والسلام ببيان أن الله تعالى يشهد على صدق دعواه في كونه نبيًّا، وكذلك تشهد الملائكة.
3. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரே என அல்லாஹ்வும் வானவர்களும் சாட்சி கூறும் விடயத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் நபியவர்களுக்கு ஆறுதலளித்தல். info