ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية - عمر شريف

external-link copy
187 : 3

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗۗ— فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟

அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கினான். அதாவது, அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று. ஆனால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும், அதற்குப் பகரமாகச் சொற்ப கிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டதாகும். (பதவிக்காகவும் செல்வத்திற்காகவும் வேதத்தில் உள்ள சட்டத்தை மாற்றவும் மறைக்கவும் செய்தனர்.) info
التفاسير: