Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси

external-link copy
55 : 40

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟

40.55. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்ப்பிப்பதையும் அவர்களால் நீர் சந்திக்கும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவிசெய்வதாக, வலுப்படுத்துவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக. காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக. info
التفاسير:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• نصر الله لرسله وللمؤمنين سُنَّة إلهية ثابتة.
1. தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி செய்வது இறைவனின் உறுதியான வழிமுறையாகும். info

• اعتذار الظالم يوم القيامة لا ينفعه.
2. மறுமை நாளில் அநியாயக்காரன் கூறும் சாக்குப்போக்கினால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. info

• أهمية الصبر في مواجهة الباطل.
3. அசத்தியத்தை எதிர்கொள்ளும்போது பொறுமையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. info

• دلالة خلق السماوات والأرض على البعث؛ لأن من خلق ما هو عظيم قادر على إعادة الحياة إلى ما دونه.
4. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிரமாண்டமானவற்றைப் படைத்தவன் அதனை விடச் சிறியவற்றிற்கு மீண்டும் உயிர்வழங்குவதற்கு ஆற்றல் உள்ளவன். info