Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси

external-link copy
136 : 3

اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ

3.135. மிகச் சிறந்த இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களை அல்லாஹ் மறைத்து, மன்னித்துவிடுவான். மறுமையில் அவர்களுக்குச் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களின் கூலி சிறப்பானதாகும். info
التفاسير:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• الترغيب في المسارعة إلى عمل الصالحات اغتنامًا للأوقات، ومبادرة للطاعات قبل فواتها.
1. நேரங்கள் கடந்துவிடுவதற்கு முன்பே அவற்றைப் பயன்படுத்தி நற்செயல்களின் பக்கம், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் பக்கம் விரையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. info

• من صفات المتقين التي يستحقون بها دخول الجنة: الإنفاق في كل حال، وكظم الغيظ، والعفو عن الناس، والإحسان إلى الخلق.
2. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளுதல், மக்களை மன்னித்தல், படைப்புகளுக்கு நன்மை செய்தல் இவையனைத்தும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களின் சுவனம் செல்லத் தகுதியான பண்புகளாகும். info

• النظر في أحوال الأمم السابقة من أعظم ما يورث العبرة والعظة لمن كان له قلب يعقل به.
3. கடந்தகால சமூகங்களை படிப்பினைபெறும் கண்ணோட்டத்தோடு பார்ப்பது உணர்ந்துகொள்ளும் உள்ளங்களுக்கு படிப்பினைகளையும் அறிவுரைகளையும் அளிக்கிறது. info