قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ

external-link copy
152 : 4

وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

4.152. அல்லாஹ்வை ஈமான்கொண்டு அவனை ஒருமைப்படுத்தி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் - நிராகரிப்பாளர்கள் செய்வதுபோன்று அவர்களிடையே பாகுபாடு காட்டாமல் - உண்மைப்படுத்தியவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் அதனூடாக வெளிப்பட்ட நற்செயல்களுக்குக் கூலியாகப் பெரும் நன்மையை அல்லாஹ் வழங்கிடுவான். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• يجوز للمظلوم أن يتحدث عن ظلمه وظالمه لمن يُرْجى منه أن يأخذ له حقه، وإن قال ما لا يسر الظالم.
1. அநீதி இழைக்கப்பட்டவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப்பற்றி, அநியாயக்காரர்களைப்பற்றி, தனக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்புபவரிடம் எடுத்துரைக்கலாம். அதனை அநீதி இழைத்தவன் விரும்பாவிட்டாலும் சரியே. info

• حض المظلوم على العفو - حتى وإن قدر - كما يعفو الرب - سبحانه - مع قدرته على عقاب عباده.
2. தனது அடியார்களைத் தண்டிப்பதற்குச் சக்தியிருந்தும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குவது போன்று, அநீதி இழைக்கப்பட்டவன் சக்தியிருந்தாலும் மன்னிக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. info

• لا يجوز التفريق بين الرسل بالإيمان ببعضهم دون بعض، بل يجب الإيمان بهم جميعًا.
3. தூதர்கள் சிலரின் மீது நம்பிக்கைகொண்டு சிலரை நம்பாமல் பாகுபாடு காட்டுவது நிராகரிப்பாகும். தூதர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கைகொள்வது கட்டாயமாகும். info