قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ

صفحہ نمبر:close

external-link copy
25 : 14

تُؤْتِیْۤ اُكُلَهَا كُلَّ حِیْنٍ بِاِذْنِ رَبِّهَا ؕ— وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟

14.25. இந்த நல்ல மரம் தன் இறைவனின் கட்டளைப்படி எல்லா நேரங்களிலும் நல்ல பழத்தைத் தருகிறது. மக்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். info
التفاسير:

external-link copy
26 : 14

وَمَثَلُ كَلِمَةٍ خَبِیْثَةٍ كَشَجَرَةٍ خَبِیْثَةِ ١جْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ ۟

14.26. இணைவைப்பான தீய வார்த்தை வேரோடு பிடுங்கி எறியப்பட்ட தீய கள்ளிச் செடியைப் போன்றதாகும். அதற்கு பூமியில் எந்த உறுதியும் இல்லை. வானத்தின் பக்கம் உயர்ந்த கிளைகளும் இல்லை. அது இறந்து காற்றோடு அடித்துச் செல்லப்படுகிறது. எனவே நிராகரிப்பைத் தாங்கிய வார்த்தையின் முடிவு அழிவே. அவனது எந்த நல்லறமும் அல்லாஹ்விடம் செல்லாது. info
التفاسير:

external-link copy
27 : 14

یُثَبِّتُ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ— وَیُضِلُّ اللّٰهُ الظّٰلِمِیْنَ ۙ۫— وَیَفْعَلُ اللّٰهُ مَا یَشَآءُ ۟۠

14.27. நிலையான ஏகத்துவ வார்த்தையை இவ்வுலகில் பூரணமாக நம்பிக்கை கொண்ட முஃமீன்களுக்கு அவர்கள் நம்பிக்கையுடன் மரணிக்கும் பொருட்டு உறுதியை வழங்குகிறான். அதேபோன்று மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கிய அநியாயக்காரர்களை, அவனை நிராகரிப்பவர்களை அவன் நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்து விடுகிறான். அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். தன் நீதியால் தான் நாடுபவர்களை வழிதவறச் செய்கிறான். தன் அருளால் தான் நாடுபவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான். அவனை நிர்ப்பந்திக்கும் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
28 : 14

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ۟ۙ

14.28. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த குறைஷிகளை நீர் பார்க்கவில்லையா? ஹரமில் பாதுகாப்பு அளித்து, அவர்களிடையே முஹம்மத் என்ற தூதரை ஏற்படுத்தி அல்லாஹ் அவர்கள் மீது புரிந்து அருட்கொடைகளுக்குப் பகரமாக நபியவர்கள் கொண்டு வந்தததை மறுத்து அவனது அருள்களை நிராகரித்தார்கள். தங்கள் சமூகத்தில் நிராகரிப்பில் அவர்களைப் பின்பற்றியோரை அழிவில் தள்ளவிட்டார்கள். info
التفاسير:

external-link copy
29 : 14

جَهَنَّمَ ۚ— یَصْلَوْنَهَا ؕ— وَبِئْسَ الْقَرَارُ ۟

14.29. அந்த அழிவின் வீடு நரகமாகும். அதன் வெப்பத்தில் சுழன்றுகொண்டே அதில் அவர்கள் நுழைவார்கள். அது அவர்களின் தங்குமிடங்களில் மோசமான தங்குமிடமாகும். info
التفاسير:

external-link copy
30 : 14

وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ— قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِیْرَكُمْ اِلَی النَّارِ ۟

14.30. இணைவைப்பாளர்கள் தாங்கள் வழிகெட்ட பிறகு தங்களைப் பின்பற்றுபவர்களையும் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “இவ்வுலக வாழ்வில் இச்சைகளினாலும் சந்தேகங்களைப் பரப்பியும் அனுபவித்துக் கொள்ளுங்கள். ஆனால் மறுமை நாளில் நீங்கள் நரகத்தின் பக்கமே திரும்ப வேண்டும். உங்களுக்கு அதைத் தவிர வேறு திரும்புமிடம் இல்லை. info
التفاسير:

external-link copy
31 : 14

قُلْ لِّعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْا یُقِیْمُوا الصَّلٰوةَ وَیُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خِلٰلٌ ۟

14.31. -தூதரே!- நீர் நம்பிக்கையாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்களே! எவ்வித வியாபாரமோ, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து விமோசனமளிக்கும் ஈடோ, ஒரு நண்பன் தன்னுடைய இன்னொரு நண்பனுக்கு பரிந்துரை செய்யும் உற்ற நட்போ இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னரே தொழுகையை சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையாக்கப்பட்ட தர்மங்களையும் உபரியான தர்மங்களையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் பொருட்டு வெளிப்படையாகவோ முஹஸ்துதியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இரகசியமாகவோ வழங்குங்கள். info
التفاسير:

external-link copy
32 : 14

اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ— وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِیَ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ۚ— وَسَخَّرَ لَكُمُ الْاَنْهٰرَ ۟ۚ

14.32. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். -மனிதர்களே!- உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டு வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் பல்வேறு வகையான பழங்களை வெளிப்படுத்துகிறான். அவன்தான் அவனுடைய ஏற்பாட்டின் மூலம் நீரில் செல்லக்கூடிய கப்பல்களையும் நீங்கள் நீர் அருந்துவதற்காகவும் உங்கள் கால்நடைகளுக்கு நீர்ப் புகட்டுவதற்காகவும் உங்கள் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதற்காகவும் ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். info
التفاسير:

external-link copy
33 : 14

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآىِٕبَیْنِ ۚ— وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۟ۚ

14.33. அவனே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இரவையும் பகலையும் பின்தொடர்ந்துவரக்கூடியதாக உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இரவை நீங்கள் உறங்குவதற்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் பகலை உங்கள் செயல்பாட்டுக்காகவும் தொழிலுக்காகவும் அவன் ஆக்கித் தந்துள்ளான். info
التفاسير:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• تشبيه كلمة الكفر بشجرة الحَنْظل الزاحفة، فهي لا ترتفع، ولا تنتج طيبًا، ولا تدوم.
1. நிராகரிப்பைத் தாங்கிய வார்த்தைக்கு படர்ந்து செல்லக்கூடிய கள்ளிச் செடி உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. அது உயர்ந்து வளராது; நல்ல விளைச்சலைத் தராது; நீடித்து நிற்கவும் செய்யாது. info

• الرابط بين الأمر بالصلاة والزكاة مع ذكر الآخرة هو الإشعار بأنهما مما تكون به النجاة يومئذ.
2. மறுமையைக் குறிப்பிடுவதுடன் தொழுமாறும் ஸகாத் வழங்குமாறும் கட்டளையிட்டிருப்பதற்கு மத்தியிலுள்ள தொடர்பு அவையிரண்டின் மூலமே அந்நாளில் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்துவதாகும். info

• تعداد بعض النعم العظيمة إشارة لعظم كفر بعض بني آدم وجحدهم نعمه سبحانه وتعالى .
3. சில மனிதர்கள் அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி செலுத்தாத தன்மையையும், மறுப்பையும் சுட்டிக்காட்டும் விதத்தில் குறிப்பிட்ட சில, பெரும் அருள்கள் எண்ணிக் கூறப்பட்டுள்ளன. info