قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
10 : 9

لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟

9.10. அவர்கள் தம்மிடமுள்ள பகைமையால் எந்த நம்பிக்கையாளனின் விஷயத்திலும் அல்லாஹ்வையோ உறவுமுறையையோ ஒப்பந்தத்தையோ பொருட்படுத்தப்போவதில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களாவர். ஏனெனில் அவர்கள் அநியாயம், வரம்பு மீறல் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளார்கள். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• دلَّت الآيات على أن قتال المشركين الناكثين العهد كان لأسباب كثيرة، أهمها: نقضهم العهد.
1. ஒப்பந்தத்தை முறித்த இணைவைப்பாளர்களுக்கு எதிராக போரிடுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, அவர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறியதேயாகும். info

• في الآيات دليل على أن من امتنع من أداء الصلاة أو الزكاة فإنه يُقاتَل حتى يؤديهما، كما فعل أبو بكر رضي الله عنه.
2. மேல் உள்ள வசனங்களிலே தொழுகையைக் கடைப்பிடிக்காமல் ஸகாத்தை வழங்காமல் இருப்பவர்களுக்கு எதிராக அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை வழங்கும் வரை போரிடலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு. - அபூபக்கர் (ரலி) ஸகாத் வழங்காதவர்களுக்கு எதிராகப் போரிட்டார்.- info

• استدل بعض العلماء بقوله تعالى:﴿وَطَعَنُوا فِي دِينِكُمْ﴾ على وجوب قتل كل من طعن في الدّين عامدًا مستهزئًا به.
3. “அவர்கள் உங்களது மார்க்கத்தைக் குறைகூறினார்கள்” என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, வேண்டுமென்றே பரிகாசம் செய்யும் நோக்கில் மார்க்கத்தில் குறைகூறியவனைக் கொலை செய்வது கடமையாகும் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். info

• في الآيات دلالة على أن المؤمن الذي يخشى الله وحده يجب أن يكون أشجع الناس وأجرأهم على القتال.
4.அல்லாஹ்வுக்கு மாத்திரமே அஞ்சும் ஒரு விசுவாசி மனிதர்களில் மிகப் பெரும் வீரனாகவும் போர்புரிவதற்கு துனிச்சலுடையவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் உண்டு. info