قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

بەت نومۇرى:close

external-link copy
31 : 78

اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ

78.31. நிச்சயமாக தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு சுவனம் என்னும் வெற்றிக்கான அவர்கள் வேண்டிய இடம் இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
32 : 78

حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ

78.32. தோட்டங்களும் திராட்சைகளும். info
التفاسير:

external-link copy
33 : 78

وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ

78.33. சம வயதுடைய கன்னிகளும். info
التفاسير:

external-link copy
34 : 78

وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ

78.34. நிரப்பமான மதுக் கிண்ணங்களும் உண்டு. info
التفاسير:

external-link copy
35 : 78

لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚۖ

78.35. அவர்கள் சுவனத்தில் வீணான விஷயத்தையோ, பொய்யானதையோ செவியுறமாட்டார்கள். ஒருவருக்கொருவர் பொய்யுரைக்கவுமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
36 : 78

جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ

78.36. இவையனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய போதுமான வெகுமதியாகும். info
التفاسير:

external-link copy
37 : 78

رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ

78.37. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவன். இம்மையிலும் மறுமையிலும் அளவிலாக் கருணையாளன். அவன் அனுமதியளித்தால் தவிர பூமியிலோ வானத்திலோ உள்ள எவரும் அவனிடம் உரையாட சக்திபெற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
38 : 78

یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ— لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟

78.38. ஜிப்ரீலும் வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில் அளவிலாக் கருணையாளன் யாருக்கு அனுமதியளித்து சிபாரிசு கூறுபவரைத் தவிர வேறு யாரும் பரிந்துரை செய்ய முடியாது. ஏகத்துவ வார்த்தையை போன்று நேர்மையானதை கூறுவார். info
التفاسير:

external-link copy
39 : 78

ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟

78.39. உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட அந்த உண்மையான நாள் வருவதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. யார் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் தம் இறைவனை திருப்திபடுத்தும் நற்செயல்களுக்கான வழியை அமைத்துக் கொள்ளட்டும். info
التفاسير:

external-link copy
40 : 78

اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬— یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠

78.40. -மனிதர்களே!- நெருங்கி வரக்கூடிய வேதனையைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்துவிட்டோம். அந்த நாளில் மனிதன் உலகில் தான் செய்த செயல்களைக் காண்பான். நீங்கள் மண்ணாக ஆகிவிடுங்கள் என்று மிருகங்களை நோக்கி மறுமை நாளில் கூறப்படுவது போன்று, நிராகரிப்பாளனும் வேதனையிலிருந்து விடுதலையடைய ஆசைப்பட்டவனாக, “அந்தோ! நான் மண்ணாக ஆகியிருக்கக்கூடாதா!” எனக் கூறுவான். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• التقوى سبب دخول الجنة.
1. இறையச்சம் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணியாக இருக்கின்றது. info

• تذكر أهوال القيامة دافع للعمل الصالح.
2. மறுமையின் பயங்கரங்களைச் சிந்திப்பது நற்காரியம் புரிவதற்குத் தூண்டக்கூடியதாகும். info

• قبض روح الكافر بشدّة وعنف، وقبض روح المؤمن برفق ولين.
3. நிராகரிப்பாளனின் ஆத்மா பலவந்தமாகவும் கடுமையாகவும் நம்பிக்கையாளனின் ஆத்மா மிருதுவாகவும் கைப்பற்றப்படும். info