قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
4 : 60

قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ ۚ— اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؗ— كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَیْنَنَا وَبَیْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰی تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَاۤ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— رَبَّنَا عَلَیْكَ تَوَكَّلْنَا وَاِلَیْكَ اَنَبْنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟

60.4. -நம்பிக்கையாளர்களே!- இப்ராஹீமிடமும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த தங்கள் சமூகத்தினரிடம் கூறினார்கள்: “உங்களைவிட்டும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் சிலைகளைவிட்டும் நாங்கள் நீங்கி விட்டோம். நீங்கள் இருந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவன் ஒருவன்மீது மட்டும் நம்பிக்கைகொள்ளும்வரை உங்களுக்கும் எங்களுக்குமிடையே உள்ள பகைமை, வெறுப்பு வெளிப்பட்டுவிட்டது.” அவர்களைப் போன்று, நிராகரிப்பாளர்களான உங்கள் சமுதாயத்தை விட்டும் நீங்கள் விலகியிருந்திருக்க வேண்டும். ஆயினும் “நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவேன்.” என இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. நீங்கள் அவரை இந்த விடயத்தில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது இப்ராஹீம் தம் தந்தையைக் குறித்து விரக்தியடைவதற்கு முன்னர் கூறிய வார்த்தையாகும். இணைவைப்பாளனுக்காக பாவமன்னிப்புக் கோருவது நம்பிக்கையாளனுக்கு உகந்ததல்ல. என்னால் உன்னை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் இருந்து எந்தவொன்றையும் தடுக்க முடியாது. எங்கள் இறைவா! எங்களின் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் உன்னையே சார்ந்துள்ளோம். பாவமன்னிப்புக் கோரியவர்களாக உன் பக்கம் திரும்பி விட்டோம். மறுமை நாளில் உன் பக்கமே நாங்கள் திரும்ப வேண்டும். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تسريب أخبار أهل الإسلام إلى الكفار كبيرة من الكبائر.
1. முஸ்லிம்கள் குறித்த செய்திகளை நிராகரிப்பாளர்களுக்கு உளவறிவிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும். info

• عداوة الكفار عداوة مُتَأصِّلة لا تؤثر فيها موالاتهم.
2. நிராகரிப்பாளர்களின் பகைமை அடிப்படையான பகமையாகும். அதில் நட்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. info

• استغفار إبراهيم لأبيه لوعده له بذلك، فلما نهاه الله عن ذلك لموته على الكفر ترك الاستغفار له.
3. இப்ராஹீம் (அலை) தனது தந்தைக்கு பாவமன்னிப்புத் தேடுவதாக அவரிடம் வாக்களித்ததனால்தான் அவ்வாறு பாவமன்னிப்புத் தேடினார்கள். அவர் நிராகரிப்பில் மரணித்ததனால் அதனை விட்டும் அவரை அல்லாஹ் தடுத்தபோது அவருக்காக பாவமன்னிப்புத் தேடுவதை விட்டுவிட்டார்கள். info