قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
22 : 42

تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ— لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ— ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟

42.22. -தூதரே!- இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் தாங்கள் சம்பாதித்த பாவங்களினால் தங்களின் மீது வேதனை சந்தேகம் இல்லாமல் இறங்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள். பாவமன்னிப்புக் கோராமல் வெறும் பயத்தினால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்கு மாறாக அவர்களில் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுவனப் பூங்காக்களில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் விரும்புகின்ற என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களையெல்லாம் பெறுவார்கள். இது மாபெரும் அருளாகும். இதற்கு இணையான வேறு அருள் இல்லை. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• خوف المؤمن من أهوال يوم القيامة يعين على الاستعداد لها.
1. மறுமை நாளின் பயங்கரங்களுக்கு நம்பிக்கையாளன் அஞ்சுவது அவனை அதற்காக தயார்படுத்திக் கொள்ள உதவுகின்றது. info

• لطف الله بعباده حيث يوسع الرزق على من يكون خيرًا له، ويضيّق على من يكون التضييق خيرًا له.
2. அடியார்களுடனான அல்லாஹ்வின் அன்பு. எனவேதான் வாழ்வாதாரம் தாராளமாகக் கிடைப்பது யாருக்கு நலவோ அவருக்கு விசாலப்படுத்தியும் நெருக்கடி யாருக்கு நலவோ அவருக்கு நெருக்கடியையும் வழங்குகின்றான். info

• خطر إيثار الدنيا على الآخرة.
3. மறுமையை விட இவ்வுலகத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் ஏற்படும் விபரீதம். info