قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
33 : 31

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا یَوْمًا لَّا یَجْزِیْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ ؗ— وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَیْـًٔا ؕ— اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ— وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟

31.33. மனிதர்களே! உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். அந்த நாளின் வேதனையை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் தந்தை தன் மகனுக்கோ மகன் தன் தந்தைக்கோ எந்தப் பயனையும் அளிக்க முடியாது. மறுமை நாளில் கூலி அளிக்கப்படும் என்ற அவனுடைய வாக்குறுதி சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும். உலக வாழ்வின் ஆசைகளும் வீண் விளையாட்டுகளும் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் உங்களுடன் பொறுமையாக நடந்துகொள்வதை வைத்தும் உங்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதை வைத்தும் ஷைத்தான் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• نقص الليل والنهار وزيادتهما وتسخير الشمس والقمر: آيات دالة على قدرة الله سبحانه، ونعمٌ تستحق الشكر.
1. இரவு, பகல் நீளமாகவும் குறைவாகவும் வருவது, சூரியனும் சந்திரனும் வசப்படுத்தப்பட்டுள்ளது ஆகியவை அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் சான்றுகளாகும். நன்றி செலுத்துவதற்கு உரித்தான அருட்கொடைகளாகும். info

• الصبر والشكر وسيلتان للاعتبار بآيات الله.
2. பொறுமையும் நன்றியும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து படிப்பினை பெறுவதற்கான இரு வழிகளாகும். info

• الخوف من القيامة يقي من الاغترار بالدنيا، ومن الخضوع لوساوس الشياطين.
3.மறுமையை அஞ்சுவது உலகைக் கண்டு ஏமாறுதல், ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்குப் பணிதல் ஆகிவற்றை விட்டும் பாதுகாக்கும். info

• إحاطة علم الله بالغيب كله.
4. மறைவான ஒவ்வொன்றையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது. info