قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

بەت نومۇرى:close

external-link copy
12 : 31

وَلَقَدْ اٰتَیْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ ؕ— وَمَنْ یَّشْكُرْ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟

31.12. நாம் லுக்மானுக்கு மார்க்கத்தில் புரிதலையும் விஷயங்களில் ஞானத்தையும் வழங்கினோம். நாம் அவரிடம் கூறினோம்: “லுக்மானே! தன்னை வழிபடுவதற்கு உமக்கு அருள்புரிந்த உம் இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக. நிச்சயமாக தம் இறைவனுக்கு நன்றி செலுத்துபவரின் நன்றியின் பயன் அவரையே சென்றடையும். ஏனெனில் அவருடைய நன்றியைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிகெட்டத்தனமாக நடந்து அவனை நிராகரித்தால் அவரது நிராகரிப்பின் தீங்கு அவரையே சென்றடையும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனெனில் அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். எல்லா நிலைகளிலும் புகழுக்குரியவன். info
التفاسير:

external-link copy
13 : 31

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِابْنِهٖ وَهُوَ یَعِظُهٗ یٰبُنَیَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ— اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِیْمٌ ۟

31.13. -தூதரே!- லுக்மான் தம் மகனிடம் அவரை நன்மையின்பால் ஆர்வமூட்டியவராக, தீமையிலிருந்து எச்சரித்தவராக கூறியதை நினைவுகூர்வீராக: “என் மகனே! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை வணங்கி விடாதே. நிச்சயமாக அவனுடன் வேறு கடவுளை வணங்குவது தனக்குச் செய்யும் மிகப் பெரும் அநியாயமாக இருக்கின்றது. ஏனெனில் அது நிரந்தர நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் பெரும் பாவத்தில் ஈடுபடுவதாகும். info
التفاسير:

external-link copy
14 : 31

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ ۚ— حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰی وَهْنٍ وَّفِصٰلُهٗ فِیْ عَامَیْنِ اَنِ اشْكُرْ لِیْ وَلِوَالِدَیْكَ ؕ— اِلَیَّ الْمَصِیْرُ ۟

31.14. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்யாத விதத்தில் தாய், தந்தையருக்குக் கீழ்ப்படியுமாறும் உபகாரம் செய்யுமாறும் நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனது தாய் சிரமத்துக்கு மேல் சிரமத்தை அனுபவித்து அவனை தன் வயிற்றில் சுமந்தாள். அவனை பால்குடி மறக்கச் செய்ய இரு ஆண்டுகள் ஆகின்றன. நாம் அவனிடம் கூறினோம்: “அல்லாஹ் உன்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்து. உன் தாய், தந்தையர் உன்னை வளர்த்துப் பராமரித்ததற்காக அவர்களுக்கும் நன்றிசெலுத்து. திரும்புவது என் பக்கம் மட்டுமே உள்ளது. அப்போது நான் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவேன். info
التفاسير:

external-link copy
15 : 31

وَاِنْ جٰهَدٰكَ عَلٰۤی اَنْ تُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِی الدُّنْیَا مَعْرُوْفًا ؗ— وَّاتَّبِعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

31.15. உன் தாய், தந்தையர் உன்னை அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும்படி கடும் பாடுபட்டு நிர்ப்பந்தம் செய்தால் நீ அவர்களுக்கு அந்த விஷயத்தில் கட்டுப்படாதே. ஏனெனில் நிச்சயமாக படைப்பாளனின் கட்டளைக்கு மாறாக படைப்புகளுக்கு கட்டுப்படக்கூடாது. உலகில் அவர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்து சேர்ந்து நடந்துகொள். ஏகத்துவம் வழிப்பாடு என்பவற்றின் மூலம் என் பக்கம் திரும்பியவர்களின் வழியைப் பின்பற்று. பின்னர் மறுமை நாளில் நீங்கள் அனைவரும் என் பக்கம் மட்டுமே திரும்ப வேண்டும். அப்போது நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து நான் உங்களுக்கு அறிவிப்பேன். அவற்றிற்கேற்ப நான் உங்களுக்குக் கூலி வழங்குவேன். info
التفاسير:

external-link copy
16 : 31

یٰبُنَیَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِیْ صَخْرَةٍ اَوْ فِی السَّمٰوٰتِ اَوْ فِی الْاَرْضِ یَاْتِ بِهَا اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟

31.16. என் மகனே! நிச்சயமாக நன்மையோ, தீமையோ அது கடுகளவு போன்று சிறியதாக இருந்து, அது யாரும் பார்க்க முடியாதவாறு பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களிலோ பூமியிலோ எந்த இடத்தில் இருந்தாலும் திட்டமாக மறுமை நாளில் அல்லாஹ் அதனைக் கொண்டுவருவான். அதற்கேற்ப அடியானுக்கு கூலி வழங்குவான். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவாளனாக உள்ளான். எந்தவொரு நுணுக்கமானவையும் அவனை விட்டும் மறையமுடியாது. அவற்றின் யதார்த்தங்கள், இடங்கள் என்பவற்றை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
17 : 31

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ— اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟ۚ

31.17. என் மகனே! தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றி அதனை நிலைநாட்டு!. நன்மையை ஏவி, தீமையைத் தடு. அதில் உனக்கு ஏற்படும் துன்பங்களில் பொறுமையாக இரு. நிச்சயமாக நான் உனக்குக் கட்டளையிடுபவை அனைத்தும் நீ செய்ய வேண்டுமென அல்லாஹ் உறுதிகொண்ட விஷயங்களாகும். இதில் உனக்கு எந்தத் தெரிவுக்கும் இடமில்லை. info
التفاسير:

external-link copy
18 : 31

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ

31.18. பெருமை கொண்டு மக்களைவிட்டும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. பூமியில் கர்வம் கொண்டு தற்பெருமையுடன் நடந்து திரியாதே. தன் நடையில் கர்வம் கொண்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மக்களிடம் பெருமையடித்து, அவற்றுக்கு நன்றி செலுத்தாத எவரையும் நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை. info
التفاسير:

external-link copy
19 : 31

وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ— اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠

31.19. வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் உன் நடையில் சாதாரணமான கண்ணியம் வெளிப்படும் நடுநிலை நடையை கடைப்பிடி. உனது குரலை தாழ்த்திக் கொள். தொல்லை தரும் விதத்தில் அதனை உயர்த்தாதே. நிச்சயமாக குரல்களில் மோசமானது உயர்ந்த சப்தமுடைய கழுதையின் குரலேயாகும். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• لما فصَّل سبحانه ما يصيب الأم من جهد الحمل والوضع دلّ على مزيد برّها.
1. தாய் அனுபவிக்கும், கருவைச் சுமத்தல், பிரசவித்தல் ஆகிய சிரமங்களை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பது தாயின் நலனில் மேலதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதைக் கூறுகிறது. info

• نفع الطاعة وضرر المعصية عائد على العبد.
2. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதால் ஏற்படும் நன்மை, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதால் ஏற்படும் தீமை இரண்டும் அடியானையே சாரும். info

• وجوب تعاهد الأبناء بالتربية والتعليم.
3. குழந்தைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்து வளர்ப்பது கட்டாயமாகும். info

• شمول الآداب في الإسلام للسلوك الفردي والجماعي.
4. இஸ்லாமிய ஒழுக்கவியல் தனிநபர் மற்றும் சமூக நடத்தைகளை உள்ளடக்கியதாகும். info