Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi

external-link copy
6 : 8

یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ

8.6. -தூதரே!- நம்பிக்கையாளர்களில் இந்த பிரிவினர் இணைவைப்பாளர்களுடன் போர் நிகழும் என்பது தெளிவான பின்னரும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைப் போல உம்முடன் விவாதம் புரிகிறார்கள். இது அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாததாலும் போருக்குப் புறப்படுவதை கடுமையாக வெறுத்ததனாலேயாகும். info
التفاسير:
Bu sayfadaki ayetlerin faydaları:
• ينبغي للعبد أن يتعاهد إيمانه ويُنمِّيه؛ لأن الإيمان يزيد وينقص، فيزيد بفعل الطاعة وينقص بضدها.
1. அடியான் தன் ஈமானில் கவனம் செலுத்தி அதனை வளர்க்க வேண்டும். ஏனெனில் அது அதிகரித்து குறையக் கூடியதாகும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதனால் அதிகரிக்கிறது. அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதனால் அது குறைகிறது. info

• الجدال محله وفائدته عند اشتباه الحق والتباس الأمر، فأما إذا وضح وبان فليس إلا الانقياد والإذعان.
2. எது சரியென்ற குழப்ப நிலை இருக்கும் பட்சத்தில்தான் தர்க்கம் புரிவது பலனளிக்கும். அது தெளிவாகிவிட்டால் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. info

• أَمْر قسمة الغنائم متروك للرّسول صلى الله عليه وسلم، والأحكام مرجعها إلى الله تعالى ورسوله لا إلى غيرهما.
3. போர்ச் செல்வங்களை பங்கிடும் உரிமை அல்லாஹ்வின் தூதருக்கு விடப்பட்டுள்ளது. மார்க்க சட்டங்களின் அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உரியது. ஏனைய எவருக்கும் அவ்வதிகாரம் இல்லை. info

• إرادة تحقيق النّصر الإلهي للمؤمنين؛ لإحقاق الحق وإبطال الباطل.
4. சத்தியத்தை சத்தியம் எனவும் அசத்தியத்தை அசத்தியம் என நிறுவுவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு இறை உதவி கிடைப்பதை விரும்புதல். info