ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය

external-link copy
47 : 8

وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟

8.47. மக்காவிலிருந்து பெருமைக்காகவும் மக்களிடம் காட்டுவதற்காவும் புறப்பட்ட இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். அதில் நுழைவதை விட்டும் அவர்களைத் தடுக்கின்றனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் சூழ்ந்தவனாக இருக்கின்றான். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• البَطَر مرض خطير ينْخَرُ في تكوين شخصية الإنسان، ويُعَجِّل في تدمير كيان صاحبه.
1. கர்வம் மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் அரிப்பை உண்டாக்கும் ஆபத்தான நோயாகும். அது அவனது அழிவைத் துரிதப்படுத்துகிறது. info

• الصبر يعين على تحمل الشدائد والمصاعب، وللصبر منفعة إلهية، وهي إعانة الله لمن صبر امتثالًا لأمره، وهذا مشاهد في تصرفات الحياة.
2. பொறுமையே துன்பங்களையும் கஷ்டங்களை தாங்கிக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. பொறுமைக்கு ஆன்மீகப் பலனும் உண்டு. அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படும் விதமாக பொறுமை காத்தோருக்கு அல்லாஹ் உதவி புரிவதே அப்பயனாகும். வாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளிலும் இதை உணரமுடியும். info

• التنازع والاختلاف من أسباب انقسام الأمة، وإنذار بالهزيمة والتراجع، وذهاب القوة والنصر والدولة.
3. முரண்பாடுகளும், கருத்து வேற்றுமைகளும் சமூகம் பிளவுபடுவதற்கான காரணிகளில் ஒன்றாகும். அது சமூகம் தோல்வியுற்று பின்வாங்கிவிடும் என்பதற்கும், பலத்தையும் வெற்றியையும் நாட்டையும் இழக்க வேண்டி வரும் என்பதற்குமான எச்சரிக்கையாகும். info

• الإيمان يوجب لصاحبه الإقدام على الأمور الهائلة التي لا يُقْدِم عليها الجيوش العظام.
4. இறை நம்பிக்கை, பெரும் படைகள் கூட செய்யத் துணியாத பாரிய விடயங்களைச் செய்வதற்கான துணிவை நம்பிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. info