ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය

அல்காரிஆ

සූරාවෙහි අරමුණු:
قرع القلوب لاستحضار هول القيامة وأحوال الناس في موازينها.
மறுமையின் அமளிதுமளியையும், அதன் அளவைநிறுவைகளில் மக்களின் நிலைகளையும் ஞாபகப்படுத்தி உள்ளங்களைத் தட்டிவிடுதல் info

external-link copy
1 : 101

اَلْقَارِعَةُ ۟ۙ

101.1. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் info
التفاسير:

external-link copy
2 : 101

مَا الْقَارِعَةُ ۟ۚ

101.2. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன? info
التفاسير:

external-link copy
3 : 101

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ

101.3. -தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும். info
التفاسير:

external-link copy
4 : 101

یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ

101.4. மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள். info
التفاسير:

external-link copy
5 : 101

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ

101.5. மலைகள் கடையப்பட்ட பஞ்சைப் போன்று அதன் எளிதாக நகரும். info
التفاسير:

external-link copy
6 : 101

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ

101.6. யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ. info
التفاسير:

external-link copy
7 : 101

فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ

101.7. அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார். info
التفاسير:

external-link copy
8 : 101

وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ

101.8. யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ, info
التفاسير:

external-link copy
9 : 101

فَاُمُّهٗ هَاوِیَةٌ ۟ؕ

101.9. மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும். info
التفاسير:

external-link copy
10 : 101

وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ

101.10. -தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
11 : 101

نَارٌ حَامِیَةٌ ۟۠

101.11. அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும். info
التفاسير:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• خطر التفاخر والتباهي بالأموال والأولاد.
1. செல்வங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்டு பெருமையடிப்பதால் ஏற்படும் விபரீதம். info

• القبر مكان زيارة سرعان ما ينتقل منه الناس إلى الدار الآخرة.
2. மண்ணறை சந்தித்துக்கொள்ளும் ஓர் இடமாகும். மனிதர்கள் விரைவாக அதிலிருந்து மறுமை வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். info

• يوم القيامة يُسْأل الناس عن النعيم الذي أنعم به الله عليهم في الدنيا.
3. மறுமை நாளில் மக்கள் உலகில் அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள். info

• الإنسان مجبول على حب المال.
4. மனிதன் பணத்தை நேசிக்கும் இயல்புள்ளவன். info