Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
100 : 6

وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِیْنَ وَبَنٰتٍ بِغَیْرِ عِلْمٍ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوْنَ ۟۠

6.100. இணைவைப்பாளர்கள் ஜின்களால் பலனளிக்கவும் தீங்கிழைக்கவும் முடியும் என்று நம்பியதன் மூலம் அவர்களை வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கி விட்டார்கள். அந்த ஜின்களையும் அல்லாஹ்தான் படைத்தான். வேறு யாருமல்ல. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். யூதர்கள் உஸைர் அவர்களையும், கிறிஸ்தவர்கள் ஈஸாவையும் எடுத்துக்கொண்டது போன்று இந்த இணைவைப்பாளர்களும் அல்லாஹ்வுக்கு பிள்ளைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். மேலும் இந்த இணைவைப்பாளர்கள் மலக்குமார்களை அல்லாஹ்வுக்கு மகள்கள் எனவும் கூறுகின்றனர். இந்த அசத்தியவாதிகள் கூறும் பண்புகளிலிருந்து அல்லாஹ் பரிசுத்தமானவன்.
info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• الاستدلال ببرهان الخلق والرزق (تخليق النبات ونموه وتحول شكله وحجمه ونزول المطر) وببرهان الحركة (حركة الأفلاك وانتظام سيرها وانضباطها)؛ وكلاهما ظاهر مشاهَد - على انفراد الله سبحانه وتعالى بالربوبية واستحقاق الألوهية.
1. படைப்பது, வாழ்வாதாரம் வழங்குதல் (தாவரத்தைப் படைத்தல், அதன் வளர்ச்சி, அதன் தோற்றம், அளவு மாறுதல், மழை பொழிதல்) என்ற ஆதாரத்தின் மூலமும் (கோள்களின் இயக்கம் நேர்த்தியான ஒழுங்கான அதன் நகர்வு) என்ற இயக்கச் சான்றின் மூலமும் அல்லாஹ்வே படைத்துப் பராமரிக்கிறான், அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நிறுவப்பட்டுள்ளது. அவ்விரண்டு ஆதாரங்களுமே வெளிரங்கமாகக் காணமுடியுமானவையாகும். info

• بيان ضلال وسخف عقول المشركين في عبادتهم للجن.
2. இணைவைப்பாளர்கள் ஜின்களை வணங்கியதன் மூலம் அவர்களது வழிகேடும் அபத்தமான சிந்தனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info