Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
191 : 3

الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ— سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟

3.191. அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் என எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூருகிறார்கள். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்தி பின்வருமாறு கூறுவார்கள்: “அல்லாஹ்வே! நீ இந்தப் பெரும் படைப்புகளையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை. வீணாகப் படைப்பதை விட்டும் நீ தூய்மையானவன். நற்செயல்கள் செய்வதற்கு பாக்கியம் அளித்து தீய செயல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக”. info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من صفات علماء السوء من أهل الكتاب: كتم العلم، واتباع الهوى، والفرح بمدح الناس مع سوء سرائرهم وأفعالهم.
1. கல்வியை மறைத்தல், மனஇச்சையைப் பின்பற்றுதல், தீய எண்ணங்களுடனும் தீய செயல்களுடனும் இருந்துகொண்டு மக்களின் பாராட்டால் மகிழ்ச்சியடைதல் போன்றன வேதக்காரர்களிலுள்ள தீய அறிஞர்களின் பண்புகளில் சிலவாகும். info

• التفكر في خلق الله تعالى في السماوات والأرض وتعاقب الأزمان يورث اليقين بعظمة الله وكمال الخضوع له عز وجل.
2. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதையும் காலங்கள் மாறிமாறி வருவதையும் சிந்தனை செய்வது அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையையும் முழுமையான அடிபணிதலையும் ஏற்படுத்துகின்றது. info

• دعاء الله وخضوع القلب له تعالى من أكمل مظاهر العبودية.
3. அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது, உளமாற அவனுக்கு அடிபணிவது அடிமைத்தனத்தின் பரிபூரண வெளிப்பாடுகளில் ஒன்றாகும். info