Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
52 : 22

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلْقَی الشَّیْطٰنُ فِیْۤ اُمْنِیَّتِهٖ ۚ— فَیَنْسَخُ اللّٰهُ مَا یُلْقِی الشَّیْطٰنُ ثُمَّ یُحْكِمُ اللّٰهُ اٰیٰتِهٖ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟ۙ

22.52. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரானாலும், நபியானாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதும்போது நிச்சயமாக ஷைத்தான் அவர் ஓதுவதில் வஹியென்று மக்களைக் குழுப்பும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். அவன் ஏற்படுத்திய சந்தேகத்தை அல்லாஹ் நீக்கி தன் வசனங்களை அவன் உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் படைத்த படைப்புகளில், ஏற்படுத்திய விதிகளில் தனது திட்டமிடலில் அவன் ஞானம் மிக்கவன். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• استدراج الظالم حتى يتمادى في ظلمه سُنَّة إلهية.
1. அநியாயக்காரனை அவனுடைய அநியாயத்தில் உழலவிட்டுப் பிடிப்பது இறைவனின் நியதியாகும். info

• حفظ الله لكتابه من التبديل والتحريف وصرف مكايد أعوان الشيطان عنه.
2. மாற்றம், சிதைவு என்பவற்றை விட்டும் அல்லாஹ் தன் வேதத்தைப் பாதுகாத்தல், அதனை விட்டும் ஷைத்தானின் உதவியாளர்களின் சூழ்ச்சிகளை திருப்புதல். info

• النفاق وقسوة القلوب مرضان قاتلان.
3. நயவஞ்சகமும், இறுகிய உள்ளமும் கொல்லும் இரு நோய்களாகும். info

• الإيمان ثمرة للعلم، والخشوع والخضوع لأوامر الله ثمرة للإيمان.
4. நம்பிக்கை அறிவின் பிரதிபலனாகும். உள்ளச்சமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதும் நம்பிக்கையின் பிரதிபலனாகும். info