Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
145 : 2

وَلَىِٕنْ اَتَیْتَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰیَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ ۚ— وَمَاۤ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ— وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟ۘ

2.145. தூதரே! வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கிப்லா மாற்றம் உண்மையானது என்று கூறும் அனைத்துவிதமான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டுவந்தாலும் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் உமது கிப்லாவை முன்னோக்க மாட்டார்கள். அல்லாஹ் உம்மை அவர்களின் கிப்லாவை விட்டும் திருப்பிய பிறகு நீரும் அதனை முன்னோக்கக்கூடியவர் அல்ல. அவர்களில் சிலர் வேறு சிலரின் கிப்லாவை முன்னோக்கக்கூடியவர்களும் அல்ல. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரை நிராகரிப்பாளர்களாகக் கருதுகின்றார்கள். சந்தேகமற்ற சரியான ஞானம் உம்மிடம் வந்தபிறகு கிப்லாவின் விஷயத்திலும் சட்டதிட்டங்களிலும் நீர் அவர்களின் மனவிருப்பங்களை பின்பற்றினால் - நேர்வழியை விட்டுவிட்டு மனஇச்சையை பின்பற்றியதனால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். நபியவர்களை விளித்து கூறப்பட்ட இந்த விஷயம் அந்த மக்களைப் பின்பற்றுவதன் விபரீதத்தை எடுத்துரைப்பதற்காகத்தான். இல்லாவிட்டால் அல்லாஹ் தன் தூதரை அவ்வாறு பின்பற்றுவதிலிருந்து பாதுகாத்துள்ளான். இது நபியவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தை எச்சரிப்பதற்காகத்தான். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أن الاعتراض على أحكام الله وشرعه والتغافل عن مقاصدها دليل على السَّفَه وقلَّة العقل.
1. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு மறுப்புத்தெரிவிப்பது அவற்றின் நோக்கங்களை விட்டு அலட்சியமாக இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும். info

• فضلُ هذه الأمة وشرفها، حيث أثنى عليها الله ووصفها بالوسطية بين سائر الأمم.
2. அனைத்து சமூகங்களைவிடவும் இந்த சமூகம் நடுநிலையாகத் திகழ்வதே இதற்கு வழங்கப்பட்ட சிறப்பாகும். சமூகத்தின் இந்த பண்பையே அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான். info

• التحذير من متابعة أهل الكتاب في أهوائهم؛ لأنهم أعرضوا عن الحق بعد معرفته.
3. வேதக்காரர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சத்தியத்தை அறிந்தபிறகும் அதனைப் புறக்கணித்தார்கள். info

• جواز نَسْخِ الأحكام الشرعية في الإسلام زمن نزول الوحي، حيث نُسِخَ التوجه إلى بيت المقدس، وصار إلى المسجد الحرام.
4. வஹி இறங்கும் காலத்தில் இஸ்லாத்தின் சில சட்டதிட்டங்கள் நீக்கப்படுவது ஆகுமானதே. ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவாக இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு முஸ்லிம்கள் கஅபாவை முன்னோக்கினார்கள். info