Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
96 : 16

مَا عِنْدَكُمْ یَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍ ؕ— وَلَنَجْزِیَنَّ الَّذِیْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

16.96. -மனிதர்களே!- உங்களிடம் இருக்கும் செல்வங்களும், இன்பங்களும், சுவண்டிகளும் அவை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அழிந்துவிடக் கூடியவையே. அல்லாஹ்விடம் இருக்கும் கூலியே நிலையானது. நிலையானதை விட்டு விட்டு அழியக்கூடியதற்கு எவ்வாறு முன்னுரிமை அழிக்கிறீர்கள்? பொறுமையாக இருந்து தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்கான சிறந்த கூலியை வழங்கிடுவோம். அவர்கள் செய்த நன்மைகளுக்கு பத்திலிருந்து எழுநூறு வரை பன்மடங்கு நாம் கூலி வழங்கிடுவோம். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• العمل الصالح المقرون بالإيمان يجعل الحياة طيبة.
1. ஈமானுடன் கூடிய நற்செயல்கள் நல்வாழ்வை அளிக்கின்றன. info

• الطريق إلى السلامة من شر الشيطان هو الالتجاء إلى الله، والاستعاذة به من شره.
2. ஷைத்தானின் தீங்கிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி அல்லாஹ்விடம் புகலிடம் பெற்று அவன் மூலம் அவனது தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாகும். info

• على المؤمنين أن يجعلوا القرآن إمامهم، فيتربوا بعلومه، ويتخلقوا بأخلاقه، ويستضيئوا بنوره، فبذلك تستقيم أمورهم الدينية والدنيوية.
3. அல்குர்ஆனை தமது வழிகாட்டியாக எடுத்து, அதன் கல்விகளைக் கற்று, அதன் நற்குணங்களை அணிகலன்களாகக் கொண்டு, அதன் ஒளியால் பிரகாசமுற்று விளங்குவது முஃமின்கள் மீது கடமையாகும். அதன் மூலமே அவர்களது ஈருலக காரியங்களும் சீராகும். info

• نسخ الأحكام واقع في القرآن زمن الوحي لحكمة، وهي مراعاة المصالح والحوادث، وتبدل الأحوال البشرية.
4. வஹி இறங்கும் காலத்தில் அல்குர்ஆனில் சட்ட மாற்றம் இடம்பெற்றதற்கு ஒரு நோக்கமுண்டு. நலன்களையும் நிகழ்வுகளையும் மனித நிலமைகள் மாறுபடுவதையும் கவனத்தில் கொள்வதே அந்நோக்கமாகும். info