Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
54 : 10

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ— وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ— وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

10.54. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• عظم ما ينتظر المشركين بالله من عذاب، حتى إنهم يتمنون دفعه بكل ما في الأرض، ولن يُقْبلَ منهم.
1. இணைவைப்பாளர்களுக்காக காத்திருக்கும் பெரும் வேதனையைக் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்தளவுக்கெனில் அவர்கள் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தாவது அதிலிருந்து தப்ப நினைப்பார்கள். அது அவர்களிடமிருந்து ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது. info

• القرآن شفاء للمؤمنين من أمراض الشهوات وأمراض الشبهات بما فيه من الهدايات والدلائل العقلية والنقلية.
2. குர்ஆன் தன்னகத்தே பொதிந்திருக்கும் வழிகாட்டல்கள், அறிவுபூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றால் இச்சைகள், சந்தேகங்கள் ஆகிய நோய்களிலிருந்து நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. info

• ينبغي للمؤمن أن يفرح بنعمة الإسلام والإيمان دون غيرهما من حطام الدنيا.
3. உலகிலுள்ள அனைத்தைக் காட்டிலும் ஈமான் மற்றும் இஸ்லாம் என்னும் அருட்கொடையைக் கொண்டு நம்பிக்கையாளன் மகிழ்ச்சியடைய வேண்டும். info

• دقة مراقبة الله لعباده وأعمالهم وخواطرهم ونياتهم.
4. அல்லாஹ் தனது அடியார்களின் செயல்கள், ஊசலாட்டங்கள், எண்ணங்கள் என்பவற்றை துல்லியமாக கண்காணிக்கின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. info