Tradução dos significados do Nobre Qur’an. - A tradução para a língua Tamil -Umar Sharif

Número de página:close

external-link copy
46 : 3

وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟

இன்னும், “அவர் தொட்டிலில் இருக்கும்போதும், வாலிபராக இருக்கும்போதும் மக்களிடம் பேசுவார். இன்னும், (அவர்) நல்லோரில் உள்ளவர்’’ (என்றும் வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள்). info
التفاسير:

external-link copy
47 : 3

قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ— قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ— اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

“என் இறைவா! ஆடவர் ஒருவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?’’ என்று (மர்யம்) கூறினார். “(அல்லாஹ்வின் நாட்டம்) இவ்வாறுதான், அல்லாஹ், தான் நாடியதை (நாடியபடி) படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்” என்று அல்லாஹ் கூறினான். info
التفاسير:

external-link copy
48 : 3

وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ

இன்னும், எழுதுவதையும் ஞானத்தையும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் அவருக்குக் கற்பிப்பான். info
التفاسير:

external-link copy
49 : 3

وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬— اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ— اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ— وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ— فِیْ بُیُوْتِكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ

இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் உருவ அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியினால் அது பறவையாக ஆகிவிடும். இன்னும், பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். இன்னும், மரணித்தோரையும் அல்லாஹ்வின் அனுமதியினால் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் (அடுத்த வேளை) என்ன (உணவை) புசிப்பீர்கள் என்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் என்ன சேமித்து வைக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது” (என்று அவர் கூறினார்). info
التفاسير:

external-link copy
50 : 3

وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫— فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟

(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “இன்னும், எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை (நான்) உண்மைப்படுத்துபவராக (இருப்பேன்). இன்னும், உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்.” info
التفاسير:

external-link copy
51 : 3

اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟

(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, நீங்கள் அவனை வணங்குங்கள். இது நேரான வழியாகும்.’’ info
التفاسير:

external-link copy
52 : 3

فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ— قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ— اٰمَنَّا بِاللّٰهِ ۚ— وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟

ஆக, அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார்?’’ எனக் கூறினார். (அவருடைய உண்மையான) தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் (தூதராகிய உமக்கு) உதவியாளர்களாக இருப்போம். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக’’ என்று கூறினார்கள். info
التفاسير: