ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
103 : 16

وَلَقَدْ نَعْلَمُ اَنَّهُمْ یَقُوْلُوْنَ اِنَّمَا یُعَلِّمُهٗ بَشَرٌ ؕ— لِسَانُ الَّذِیْ یُلْحِدُوْنَ اِلَیْهِ اَعْجَمِیٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیْنٌ ۟

“அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோம் நாட்டை சேர்ந்த) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) அவர்கள் சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும். info
التفاسير:

external-link copy
104 : 16

اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۙ— لَا یَهْدِیْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டார்களோ அவர்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
105 : 16

اِنَّمَا یَفْتَرِی الْكَذِبَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ ۟

பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இன்னும், அவர்கள்தான் பொய்யர்கள். (நமது நபி அல்ல.) info
التفاسير:

external-link copy
106 : 16

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِیْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَىِٕنٌّۢ بِالْاِیْمَانِ وَلٰكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَیْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟

எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின்னர், அவனை நிராகரிப்பாரோ, ஆனால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டு, அவரது உள்ளமோ நம்பிக்கையில் திருப்தியடைந்த நிலையில் இருப்பவரைத் தவிர - (அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.) எனினும், எவராவது மனதால் நிராகரிப்பை விரும்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் நிகழும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
107 : 16

ذٰلِكَ بِاَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ ۙ— وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟

அது, “நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை விரும்பினார்கள்; இன்னும், நிராகரிக்கின்ற மக்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்” என்ற காரணத்தினால் ஆகும். info
التفاسير:

external-link copy
108 : 16

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟

அவர்கள், எத்தகையோர் என்றால் அவர்களின் உள்ளங்கள் மீதும், செவிகள் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்கள்தான் (தங்கள் தீயமுடிவை உணராமல்) கவனமற்று இருப்பவர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
109 : 16

لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ ۟

உண்மையில் நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான். info
التفاسير:

external-link copy
110 : 16

ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِیْنَ هَاجَرُوْا مِنْ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ— اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

பிறகு, எவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு ஹிஜ்ரத் செய்து (தமது தாய் நாட்டை துறந்து), பிறகு போர் புரிந்து, (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின்னர் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான். info
التفاسير: