Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k.

Puslapio numeris:close

external-link copy
43 : 14

مُهْطِعِیْنَ مُقْنِعِیْ رُءُوْسِهِمْ لَا یَرْتَدُّ اِلَیْهِمْ طَرْفُهُمْ ۚ— وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ۟ؕ

14.43. மக்கள் தங்களின் அடக்கஸ்தலங்களிலிருந்து எழுந்து அழைப்பவரின்பக்கம் விரையும் போது பதற்றத்தால் அவர்களின் தலைகள் வானத்தின்பால் உயர்ந்தவையாக இருக்கும். அவர்களின் பார்வைகள் அவர்களின்பால் திரும்ப வராது. மாறாக அவை காணும் பயங்கரங்களால் நிலைகுத்தி நின்று விடும். புத்தியில்லாமல் அவர்களின் உள்ளங்கள் வெறுமையாக இருக்கும். அந்த நாளில் பதற்றத்தினால் எதையும் அவற்றால் புரிந்துகொள்ள முடியாது. info
التفاسير:

external-link copy
44 : 14

وَاَنْذِرِ النَّاسَ یَوْمَ یَاْتِیْهِمُ الْعَذَابُ فَیَقُوْلُ الَّذِیْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ— نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ— اَوَلَمْ تَكُوْنُوْۤا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍ ۟ۙ

14.44. -தூதரே!- மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து உம் சமூகத்தினரை அச்சமூட்டுவீராக. அப்போது அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணைவைத்து தமக்குத் தாமே அநீதியிழைத்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக. எங்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவாயாக. கொஞ்ச நாள் வரை எங்களை இவ்வுலகின்பால் திருப்பி அனுப்புவாயாக. நாங்கள் உன்மீது நம்பிக்கை கொண்டு நீ எங்களின் பக்கம் அனுப்பிய தூதர்களைப் பின்பற்றுகிறோம்.” அவர்களைக் கண்டித்தவாறு அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்: “மரணித்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தவாறு நிச்சயமாக இவ்வுலகத்திலிருந்து மறுமையின்பால் எந்த இடம்பெயர்வும் இல்லை என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறவில்லையா?! info
التفاسير:

external-link copy
45 : 14

وَّسَكَنْتُمْ فِیْ مَسٰكِنِ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَیَّنَ لَكُمْ كَیْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ۟

14.45. அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத்தாமே அநீதியிழைத்துக்கொண்ட ஹூத் நபியின் சமூகம், ஸாலிஹ் நபியின் சமூகம் போன்ற உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமூகங்கள் வசித்த இடங்களில்தான் நீங்கள் வசிக்கிறீர்கள். அவர்களுக்கு நாம் ஏற்படுத்திய அழிவு உங்களுக்குத் தெரியும். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தில் நாம் உதாரணங்களைக் கூறினோம். ஆனால் நீங்கள் படிப்பினை பெறவில்லை. info
التفاسير:

external-link copy
46 : 14

وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ؕ— وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ۟

14.46. முன்னர் அநியாயக்கார சமூகங்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் வசிக்கும் இவர்கள் முஹம்மது நபியைக் கொல்வதற்கும், அவருடைய அழைப்புப் பணியை நிறுத்துவதற்கும் இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவர்களின் இரகசியத் திட்டங்களை அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவர்களின் திட்டம் பலவீனமானது. அதன் பலவீனத்தினால் மலைகளையோ எனையவற்றையோ அது அகற்றாது. ஆனால் அல்லாஹ் அவர்களுக்குச் செய்யும் சூழ்ச்சி அதற்கு மாற்றமானது. info
التفاسير:

external-link copy
47 : 14

فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ

14.47. -தூதரே!- அல்லாஹ் தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதாக தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவான் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிடாதீர். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. அவன் தன் நேசர்களை மேலோங்கச் செய்கிறான். தன் எதிரிகளையும் தனது தூதர்களின் எதிரிகளையும் கடுமையாக பழி தீர்ப்பவன். info
التفاسير:

external-link copy
48 : 14

یَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَیْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟

14.48. மறுமைநாள் நிகழும்போது, இந்த பூமி தூய்மையான, வெண்மையான வெறொரு பூமியாக, வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் தங்கள் அடக்கத்தலங்களிலிருந்து வெளிப்பட்டு தங்கள் உடல்களோடும் செயல்களோடும் அனைவரையும் அடக்கியாளும் ஏகனான அல்லாஹ்வின் முன்னால் நிற்பார்கள். info
التفاسير:

external-link copy
49 : 14

وَتَرَی الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ مُّقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟ۚ

14.49,50. தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும். info
التفاسير:

external-link copy
50 : 14

سَرَابِیْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰی وُجُوْهَهُمُ النَّارُ ۟ۙ

14.49,50. தூதரே! பூமி வேறு பூமியாக வானங்கள் வேறு வானங்களாக மாற்றப்படும் நாளில் நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் ஒருவருக்கொருவர் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர். அவர்களின் கைகளும் கால்களும் அவர்களின் கழுத்தோடு சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கும். அவர்களின் ஆடைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். அவர்களின் முகங்களை நெருப்பு மூடியிருக்கும். info
التفاسير:

external-link copy
51 : 14

لِیَجْزِیَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

14.51. இது ஒவ்வொரு ஆன்மாவும் செய்த நற்செயல்கள் அல்லது தீய செயல்களுக்கு கூலி வழங்குவதற்காகவேயாகும். நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன். அவன் அனைவரையும் ஒரேநாளில் விசாரணை செய்துவிடுவான். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிப்பதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை. info
التفاسير:

external-link copy
52 : 14

هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنْذَرُوْا بِهٖ وَلِیَعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِیَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟۠

14.52. முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு வந்த அறிவிப்பாகும். இதிலுள்ள கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டு அவர்களை அச்சமூட்டுவதற்காகவும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் என்பதை அறிந்து அவனுக்கு யாரையும் இணையாக்காது அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும் நேர்த்தியான அறிவுடையவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது வந்துள்ளது. ஏனெனில் அவர்களே உபதேசங்களையும், படிப்பினைகளையும் கொண்டு பயனடைவார்கள். info
التفاسير:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• تصوير مشاهد يوم القيامة وجزع الخلق وخوفهم وضعفهم ورهبتهم، وتبديل الأرض والسماوات.
1. படைப்புகள் பதற்றமடைவது, பயப்படுவது, பலவீனமடைவது, அச்சம் கொள்வது, வானங்களும் பூமியும் மாற்றப்படுவது என மறுமை நாளின் காட்சிகள் அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. info

• وصف شدة العذاب والذل الذي يلحق بأهل المعصية والكفر يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளைத் தாக்கும் கடுமையான வேதனை மற்றும் இழிவு வர்ணிக்கப்பட்டுள்ளது. info

• أن العبد في سعة من أمره في حياته في الدنيا، فعليه أن يجتهد في الطاعة، فإن الله تعالى لا يتيح له فرصة أخرى إذا بعثه يوم القيامة.
3. இவ்வுலக வாழ்வில் அடியானுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ முயற்சிக்க வேண்டும். அவன் மறுமை நாளில் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு விட்டால் நிச்சயமாக மீண்டும் அந்த வாய்ப்பை அல்லாஹ் அவனுக்கு வழங்கமாட்டான். info