وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز

external-link copy
97 : 9

اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا یَعْلَمُوْا حُدُوْدَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

9.97. நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் அவர்களது நிராகரிப்பும் நயவஞ்சகமும் நகரவாசிகளை விட கடுமையாக இருக்கும். வெறுப்பு, கடின மனம் மற்றும் குறைவான தொடர்பு, ஆகிய பண்புகள் அவர்களிடம் உள்ளதால் மார்க்கத்தையும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய சட்டங்களையும் கடமைகளையும் உபரியானவற்றையும் அவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன். info
التفاسير:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• ميدان العمل والتكاليف خير شاهد على إظهار كذب المنافقين من صدقهم.
1. நயவஞ்சகர்களின் பொய்யை வெளிப்படுத்துவதற்கு சிறந்த சான்று செயல் மற்றும் கடமைகளின் களமேயாகும். info

• أهل البادية إن كفروا فهم أشد كفرًا ونفاقًا من أهل الحضر؛ لتأثير البيئة.
2. நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் சூழ்நிலையின் தாக்கத்தால் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் நகரவாசிகளைவிட கடுமையானவர்களாக இருப்பார்கள். info

• الحض على النفقة في سبيل الله مع إخلاص النية، وعظم أجر من فعل ذلك.
3. உளத் தூய்மையுடன் அல்லாஹ்வின் பாதையில் செலவளிக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது மகத்தான கூலியைத் பெற்றுத்தரக்கூடியதாகும். info

• فضيلة العلم، وأن فاقده أقرب إلى الخطأ.
4. அறிவின் முக்கியத்துவமும் அதனை இழந்தவன் தவறுவிடுவதற்கு மிகவும் அருகதையுடையவன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. info