クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
161 : 3

وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ— وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

3.161. போர்ச் செல்வங்களில் எதனையும் எடுத்து மோசடி செய்வது இறைத்தூதர்களில் எவருக்கும் உகந்த காரியம் அல்ல. அல்லாஹ் பிரத்யேகமாக அவருக்கென அனுமதித்ததைத் தவிர. உங்களில் போர்ச் செல்வங்களில் மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். படைப்பினங்களுக்கு முன்னால் தான் செய்த மோசடியோடு அவன் வருவான். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றுக்கான கூலி குறைவின்றி முழுமையாக வழங்கப்படும். அவர்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ நன்மைகள் குறைக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. info
التفاسير:
本諸節の功徳:
• النصر الحقيقي من الله تعالى، فهو القوي الذي لا يحارب، والعزيز الذي لا يغالب.
1. உண்மையான உதவி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனை எதிர்க்க முடியாதளவு வல்லமைமிக்கவன், அவன் யாவற்றையும் மிகைத்தவன், யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. info

• لا تستوي في الدنيا حال من اتبع هدى الله وعمل به وحال من أعرض وكذب به، كما لا تستوي منازلهم في الآخرة.
2. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டவர்களும் அதனைப் புறக்கணித்து, நிராகரித்தவர்களும் மறுமைநாளில் எவ்வாறு அந்தஸ்தில் சமமாகமாட்டார்களோ அது போன்றே இவ்வுலகிலும் அவர்கள் சமமான நிலையில் இருக்கமாட்டார்கள். info

• ما ينزل بالعبد من البلاء والمحن هو بسبب ذنوبه، وقد يكون ابتلاء ورفع درجات، والله يعفو ويتجاوز عن كثير منها.
3.அடியானுக்கு நிகழும் சோதனைகள் அவனது பாவங்களின் வினைகளேயாகும். சில வேளை சோதனையுடன் அந்தஸ்துகளில் உயர்வும் கிடைக்கும். அல்லாஹ் பாவங்களில் பெரும்பாலானவற்றை மன்னித்துவிடுகிறான். info