Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
131 : 4

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ— وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟

4.131. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை, அவையிரண்டிற்கு இடையிலுள்ளவையின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உங்களிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள் என்று. நீங்கள் இந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டால் உங்களுக்கு நீங்களேதான் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். உங்களின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் படைப்புகள் அனைவரையும்விட்டு தேவையற்றவன். தன் அனைத்துப் பண்புகளுக்காகவும் செயல்களுக்காகவும் புகப்படுபவன். info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• استحباب المصالحة بين الزوجين عند المنازعة، وتغليب المصلحة بالتنازل عن بعض الحقوق إدامة لعقد الزوجية.
1. பிரச்சினை ஏற்படும்போது திருமண உறவை நிலைத்திருக்கச் செய்யும்பொருட்டு ஒருவருக்கொருவர் உரிமைகளை விட்டுக் கொடுத்து கணவன், மனைவி இருவரும் சமாதானம் செய்துகொள்வதே சிறந்ததாகும். info

• أوجب الله تعالى العدل بين الزوجات خاصة في الأمور المادية التي هي في مقدور الأزواج، وتسامح الشرع حين يتعذر العدل في الأمور المعنوية، كالحب والميل القلبي.
2. கணவனின் சக்திக்குட்பட்ட உலக விவகாரங்களில் மனைவியரிடையே நீதிசெலுத்துவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அன்பு நேசம் போன்ற நீதிசெலுத்தமுடியாத மனரீதியான செயல்பாடுகளில் நீதமாக நடப்பது சாத்தியமற்ற கட்டங்களில் மார்க்கம் விட்டுக்கொடுத்துள்ளது. info

• لا حرج على الزوجين في الفراق إذا تعذرت العِشْرة بينهما.
3. கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது சிரமமாக இருந்தால் இருவரும் பிரிந்துவிடுவது குற்றமாகாது. info

• الوصية الجامعة للخلق جميعًا أولهم وآخرهم هي الأمر بتقوى الله تعالى بامتثال الأوامر واجتناب النواهي.
4. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சவேண்டும் என்பதே, ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து மனிதர்களுக்குமான பொருள்செறிந்த அறிவுரையாகும். info