Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
15 : 2

اَللّٰهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟

2.15. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களை இவர்கள் பரிகாசம் செய்ததற்குப் பகரமாக அல்லாஹ்வும் இவர்களைப் பரிகாசம் செய்கிறான். இவர்களின் செயல்களுக்கு ஏற்ற கூலியைத்தான் இவ்வாறு கொடுக்கிறான். இதனால் இவர்களின் விஷயத்தில் முஸ்லிம்களுக்குரிய சட்டத்தையே இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறான். மறுமையிலோ இவர்களின் நிராகரிப்புக்கும் நயவஞ்சகத்திற்குமான கூலியைக் கொடுத்துவிடுவான். இவர்களுக்கு அவன் அவகாசம் கொடுத்திருப்பதின் நோக்கமே, இவர்கள் வழிகேட்டில் முன்னேறிக்கொண்டே சென்று தடுமாறியவர்களாக நிலைத்திருக்கட்டும் என்பதற்குத்தான். info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• أن من طبع الله على قلوبهم بسبب عنادهم وتكذيبهم لا تنفع معهم الآيات وإن عظمت.
1. பிடிவாதம் மற்றும் நிராகரிப்பின் காரணமாக யாருடைய உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டானோ, எவ்வளவு பெரிய அத்தாட்சிகளும் அவர்களுக்குப் பலனளிக்கப் போவதில்லை. info

• أن إمهال الله تعالى للظالمين المكذبين لم يكن عن غفلة أو عجز عنهم، بل ليزدادوا إثمًا، فتكون عقوبتهم أعظم.
2. நிராகரிப்பாளர்களான அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் அவகாசம் அளிப்பதெல்லாம் இயலாமையாலோ, மறதியாலோ அல்ல. மாறாக, அவர்களின் பாவங்கள் அதிகமாகி பெரும் தண்டனையை அனுபவிக்கட்டும் என்பதற்காகத்தான். info