Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

external-link copy
74 : 9

یَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ— وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ یَنَالُوْا ۚ— وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ— فَاِنْ یَّتُوْبُوْا یَكُ خَیْرًا لَّهُمْ ۚ— وَاِنْ یَّتَوَلَّوْا یُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِیْمًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَمَا لَهُمْ فِی الْاَرْضِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

9.74. நாம் உம்மைத் திட்டி, உமது மார்க்கத்தைக் குறை கூறியதாக உமக்குக் கிடைத்த தகவல் தவறானது அவ்வாறு தாம் எதுவும் கூறவில்லை என்று நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியமிட்டுக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நிராகரிப்புக்குரிய அவற்றைக் கூறியே உள்ளனர். அவர்கள் ஈமானை வெளிப்படுத்திய பிறகு நிராகரிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டார்கள். நபியவர்களை படுகொலை செய்வதற்குக் கூட முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை. யாரும் மறுக்காத ஒன்றை அவர்கள் மறுத்துள்ளனர். அதுதான் தன் தூதருக்கு அளித்த போர்ச் செல்வங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியதாகும். தங்களின் நயவஞ்சகத்தனத்திலிருந்து அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டால் அதிலே தொடர்ந்திருப்பதை விட அது அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ்விடம் மீளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டால் இவ்வுலகில் கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் மறுமையில் நெருப்பினால் வேதனை செய்தும் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ அதனைத் தடுக்கும் உதவியாளர்களோ அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• وجوب جهاد الكفار والمنافقين، فجهاد الكفار باليد وسائر أنواع الأسلحة الحربية، وجهاد المنافقين بالحجة واللسان.
1. நிராகரிப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் ஜிஹாது செய்வது கட்டாயமாகும். நிராகரிப்பாளர்களுடன், கையினாலும் ஏனைய யுத்த ஆயுதங்களைக் கொண்டும் நயவஞ்சகர்களுடன், ஆதாரங்களைக் கொண்டும் நாவின் மூலமும் ஜிஹாது செய்ய வேண்டும். info

• المنافقون من شرّ الناس؛ لأنهم غادرون يقابلون الإحسان بالإساءة.
2. மனிதர்களில் மிகவும் மோசமானர்கள் நயவஞ்சகர்களாவர். ஏனெனில் அவர்கள் நன்மையை தீமையால் எதிர்கொள்ளும் துரோகிகளாவர். info

• في الآيات دلالة على أن نقض العهد وإخلاف الوعد يورث النفاق، فيجب على المسلم أن يبالغ في الاحتراز عنه.
3. ஒப்பந்தத்தை மீறுவது வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவது என்பன உள்ளத்தில் நயவஞ்சகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும். எனவே அதனைத் தவிர்ந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்துவது ஒரு முஸ்லிமின் மீது கடமையாகும். info

• في الآيات ثناء على قوة البدن والعمل، وأنها تقوم مقام المال، وهذا أصل عظيم في اعتبار أصول الثروة العامة والتنويه بشأن العامل.
4. உடல் மற்றும் உழைப்பின் வலிமையைப் புகழ்ந்தும் அது பணத்துக்கு நிகரானது எனவும் இவ்வசனங்கள் குறிப்பிடுகின்றன. இது செல்வத்தின் பொது மூலதனங்களைக் கவனத்தில் கொள்வதிலும் தொழிலாளியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும் முக்கிய அடிப்படையாகும். info