Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
3 : 58

وَالَّذِیْنَ یُظٰهِرُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ ثُمَّ یَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ یَّتَمَآسَّا ؕ— ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

58.3. யாரெல்லாம் இந்த மோசமான வார்த்தையைக் கூறிவிட்டு பின்னர் அவ்வாறு தாய்மார்களாக ஒப்பிடப்பட்டவர்களோடு உறவுகொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் உறவு முன்னால் ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இந்த மேற்கூறப்பட்ட கட்டளை நீங்கள் உங்கள் மனைவியரை தாய்மார்களோடு ஒப்பிட்டுக் கூறக்கூடாது என்பதை ஏவுவதற்காகத்தான். அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• لُطْف الله بالمستضعفين من عباده من حيث إجابة دعائهم ونصرتهم.
1. பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தல், உதவி செய்தல் என்பவற்றின் மூலம் அல்லாஹ் பலவீனமான தன் அடியார்களின்மீது கருணை காட்டுகிறான். info

• من رحمة الله بعباده تنوع كفارة الظهار حسب الاستطاعة ليخرج العبد من الحرج.
2.தனது அடியார்களின் மீதான அல்லாஹ்வின் கருணைதான் அடியான் சங்கடப்படக்கூடாது என்பதற்காக ழிஹாருக்கு சக்திக்கேற்ப பரிகாரங்களை வகைப்படுத்தியுள்ளான். info

• في ختم آيات الظهار بذكر الكافرين؛ إشارة إلى أنه من أعمالهم، ثم ناسب أن يورد بعض أحوال الكافرين.
3. ழிஹாருடைய வசனங்களின் முடிவில் நிராகரிப்பாளர்களைக் குறிப்பிடுவதன் மூலம் இச்செயல் அவர்களுக்குரியது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் நிராகரிப்பாளர்களின் சில நிலமைகளைக் குறிப்பிடுவதும் அதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. info