Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
41 : 39

اِنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ— فَمَنِ اهْتَدٰی فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟۠

39.41. -தூதரே!- நாம் மனிதர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக உம்மீது குர்ஆனை சத்தியத்துடன் இறக்கியுள்ளோம். யாரேனும் நேர்வழியைப் பின்பற்றினால் நேர்வழியின் பயன் அவருக்கே உரியது. அவரது நேர்வழியால் அல்லாஹ்வுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நிச்சயமாக அவன் அதனை விட்டும் தேவையற்றவன். யாரேனும் வழிகெட்டால் அந்த வழிகேட்டின் தீங்கு அவனுக்கே கிடைக்கும். அவனின் வழிகேட்டால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் இல்லை. நீர் அவர்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பதற்கு அவர்களின் பொறுப்பாளி அல்ல. எடுத்துரைக்குமாறு உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. info
التفاسير:
Benefits of the verses in this page:
• النوم والاستيقاظ درسان يوميان للتعريف بالموت والبعث.
1. தூக்கமும் விழிப்பும் மரணத்தையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அறிந்துகொள்வதற்கான தினசரி பாடங்களாகும். info

• إذا ذُكِر الله وحده عند الكفار أصابهم ضيق وهمّ؛ لأنهم يتذكرون ما أمر به وما نهى عنه وهم معرضون عن هذا كله.
2. நிராகரிப்பாளர்களிடம் அல்லாஹ் ஒருவன் நினைவுகூரப்பட்டால் கவலையும் நெருக்கடியும் ஏற்படும். ஏனெனில் அவர்கள் அவன் ஏவியவைகளையும் தடுத்தவைகளையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அவையனைத்தையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். info

• يتمنى الكافر يوم القيامة افتداء نفسه بكل ما يملك مع بخله به في الدنيا، ولن يُقْبل منه.
3. நிராகரிப்பாளன் இவ்வுலகில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டாலும் மறுமை நாளில் தன்னிடம் உள்ள அனைத்தையும் ஈடாகக் கொடுத்துவிட விரும்புவான். ஆனால் அவனிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. info