Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
13 : 35

یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ۙ— وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖؗ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ— وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا یَمْلِكُوْنَ مِنْ قِطْمِیْرٍ ۟ؕ

35.13. அல்லாஹ் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். பகலை இரவில் பிரவேசிக்கச் செய்பிரவேசிக்கச் செய்து அதனை நீளமாக்குகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தித் தந்துள்ளான். அவற்றில் ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த தவணையின்படி சென்று கொண்டிருக்கும். அந்த தவணை மறுமை நாளாகும். இவையனைத்தையும் நிர்ணயம் செய்து இயங்கச் செய்பவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ். ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவனை விடுத்து அவர்கள் வணங்கும் சிலைகள் பேரீச்சம் பழக்கொட்டையின் மேலுள்ள தோலளவுக்குக் கூட உரிமையுடையவைகளல்ல. எனவே என்னை விடுத்து அவற்றை எவ்வாறுதான் நீங்கள் வணங்குகிறீர்களோ?! info
التفاسير:
Benefits of the verses in this page:
• تسخير البحر، وتعاقب الليل والنهار، وتسخير الشمس والقمر: من نعم الله على الناس، لكن الناس تعتاد هذه النعم فتغفل عنها.
1. கடல், சூரியன், சந்திரன் ஆகிவற்றை வசப்படுத்தல், இரவு, பகல் மாறிமாறி வருதல் ஆகியவை மக்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளாகும். ஆயினும் அவர்கள் இந்த அருட்கொடைகளைப் பார்த்து பழகிவிட்டதால் அலட்சியமாக இருக்கிறார்கள். info

• سفه عقول المشركين حين يدعون أصنامًا لا تسمع ولا تعقل.
2. செவியேற்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத சிலைகளை இணைவைப்பாளர்கள் அழைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும். info

• الافتقار إلى الله صفة لازمة للبشر، والغنى صفة كمال لله.
3. அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருப்பது மனிதனுடன் எப்போதும் ஒன்றியிருக்கும் பண்பாகும். தேவையற்ற தன்மை அல்லாஹ்வின் ஒரு பரிபூரணத் தன்மையாகும். info

• تزكية النفس عائدة إلى العبد؛ فهو يحفظها إن شاء أو يضيعها.
4. மனதை தூய்மைப்படுத்திக் கொள்வதால் அடியானுக்குத்தான் நன்மை ஏற்படுகிறது. அவன் விரும்பினால் அதனைப் பாதுகாக்கலாம் இல்லையெனில் வீணாக்கிவிடலாம். info