Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
260 : 2

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ— قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ— قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ— قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ— وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠

2.260.தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம்: என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனது பார்வைக்குக் காட்டு என்று கேட்டதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு அவன், நீர் இந்த விஷயத்தை நம்பவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நம்புகிறேன். ஆயினும் என் மனதிருப்தியை இன்னும் அதிகரிக்கவே இவ்வாறு கேட்கிறேன் என்றார். அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: நான்கு பறவைகளை எடுத்துக் கொள்வீராக. அவற்றை உம்பக்கம் சேர்த்து துண்டுதுண்டாக அறுப்பீராக. பின்னர் உம்மைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு மலையிலும் அவற்றில் ஒரு பகுதியை வைப்பீராக. பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக, அவை உயிர்பெற்று உம்மிடம் விரைந்து வரும். இப்ராஹீமே! அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன் என்பதையும் தான் வழங்கும் கட்டளைகளில் ஞானம்மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்வீராக. info
التفاسير:
Benefits of the verses in this page:
• مراتب الإيمان بالله ومنازل اليقين به متفاوتة لا حد لها، وكلما ازداد العبد نظرًا في آيات الله الشرعية والكونية زاد إيمانًا ويقينًا.
1. அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானின் படித்தரங்கள் ஏற்றத்தாழ்வானவை. அவற்றிற்கு எல்லையே கிடையாது. அல்லாஹ்வின் சட்டவசனங்களிலும், பிரபஞ்ச அத்தாட்சிகளிலும் அடியான் கவனம் செலுத்த, செலுத்த அவனுடைய ஈமானும் உறுதியும் அதிகரித்துக் கொண்டே செல்லும். info

• بَعْثُ الله تعالى للخلق بعد موتهم دليل ظاهر على كمال قدرته وتمام عظمته سبحانه.
2. அல்லாஹ் படைப்புகளை அவை மரணித்த பின்னரும் உயிர்த்தெழச்செய்வது அவனுடைய பரிபூரணமான ஆற்றல் மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். info

• فضل الإنفاق في سبيل الله وعظم ثوابه، إذا صاحبته النية الصالحة، ولم يلحقه أذى ولا مِنّة محبطة للعمل.
3. தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் தர்மம் ஏராளமான நன்மைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கியது.அதனுடன் தொல்லையும் நன்மையைப் போக்கிவிடும் சொல்லிக்காட்டுதலும் இருக்கக்கூடாது. info

• من أحسن ما يقدمه المرء للناس حُسن الخلق من قول وفعل حَسَن، وعفو عن مسيء.
4. ஒரு மனிதன் மக்களுக்கு வழங்குபவற்றில் மிகச்சிறந்தது நற்குணமிக்க சொல்லும் செயலும் தவறிழைத்தவனை மன்னிப்பதுமாகும். info