Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
40 : 12

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

12.40. நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக தாமாகவே பெயர் சூட்டிக்கொண்டவைகளையே நீங்கள் வணங்குகிறீர்கள். வணக்கத்தில் அவைகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. அந்த பெயர்கள் சரியானவை என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. எல்லா படைப்புகளின் விஷயத்திலும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துமாறு ஏவியுள்ளான். அவனுக்கு யாரையும் இணையாக்குவதை தடைசெய்துள்ளான். இந்த ஓரிறைக்கொள்கையே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிவதில்லை. எனவேதான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அவனுடைய படைப்புகளில் சிலவற்றை வணங்குகிறார்கள். info
التفاسير:
Benefits of the verses in this page:
• وجوب اتباع ملة إبراهيم، والبراءة من الشرك وأهله.
1. இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவதும் இணைவைப்பையும், இணைவைப்பாளர்களையும் விட்டு நீங்கி விடுவதும் கட்டாயமாகும். info

• في قوله:﴿ءَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ ...﴾ دليل على أن هؤلاء المصريين كانوا أصحاب ديانة سماوية لكنهم أهل إشراك.
2. (சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?) என்ற வசனம் இந்த எகிப்தியர்கள் வானுலக மார்க்கத்தைச் சார்ந்தவர்கள ஆனால் இணைவைப்பாளர்களாக காணப்பட்டனர் என்பதற்கான ஆதாரமாகும். info

• كلُّ الآلهة التي تُعبد من دون الله ما هي إلا أسماء على غير مسميات، ليس لها في الألوهية نصيب.
3. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவை வணக்கத்திற்கு சிறிதும் தகுதியானவை அல்ல. info

• استغلال المناسبات للدعوة إلى الله، كما استغلها يوسف عليه السلام في السجن.
4. யூஸுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்து பயன்படுத்திக் கொண்டது போல சந்தர்ப்ப சூழ்நிலைகளை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். info